Skip to main content

அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் மாநாடு 

Published on 02/09/2022 | Edited on 02/09/2022

 

Government Transport Corporations Workers Federation Conference

 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் 15வது மாநாடு 2ஆம் தேதி முதல் வருகின்ற 4ஆம் தேதி வரை திருச்சியில் நடைபெற உள்ளது. அதன் காரணமாக நேற்று திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

 

இந்த செய்தியாளர் சந்திப்பில் ஏ.ஐ.டி.யு.சி. யின் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம், ஏ.ஐ.டி.யு.சி.யின் மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ், போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யு.சி.யின் மண்டல தலைவர் நேரு துரை, மண்டல பொதுச்செயலாளர் சுப்ரமணியன், துணை பொதுச்செயலாளர் ஐயப்பன், சி.பி.ஐ திருச்சி மாநகர செயலாளர் சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

இந்த மாநாட்டில் செப்டம்பர் 2019 முதல் ஊதிய உயர்வு அமலாக்குவது, சர்வீஸ் காலம், பணி உயர்வு, பதவி உயர்வுக்கு, ஏற்ப பே மேட்ரிக்ஸ் அடிப்படையில் சம்பள நிலையை உயர்த்துவது. பட்ஜெட்டில் போக்குவரத்து கழகங்களின் வரவு செலவு பற்றாக்குறை நிதி ஒதுக்குவது, போக்குவரத்து கழகங்களை சீரமைப்பது, மேம்படுத்துவது. கடுமையான தண்டனை முறைகளை கை விடுவது. 2022 செப்டம்பர் 15வது ஊதிய ஒப்பந்தத்தில் அரசு மற்றும் மின்வாரிய ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை விவாதித்து அதை முன்னெடுத்து செல்வதற்கான எதிர்கால திட்டங்களை வகுப்பதற்காக இந்த மாநாடு கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த மாநாட்டில் போக்குவரத்து துறை, நகராட்சி வளர்ச்சி துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அமைச்சர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் சுப்பராயன், பொதுச் செயலாளர் மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ராமச்சந்திரன், மாரிமுத்து ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேருந்திற்குள் குடை பிடித்தபடி பயணம்

Published on 19/11/2023 | Edited on 19/11/2023

 

People travel with umbrellas inside the bus!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் மேற்கூரை வழியே மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதியடைந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. 

 

தூத்துக்குடி மாவட்டம் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (19-11-23) காலை 11 மணி அளவில் அத்திமரப்பட்டி கிராமத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று மழை பெய்ததால் பேருந்து மேற்கூரை வழியே பேருந்தின் உள்ளே மழை நீர் பெய்தது. 

 

இதனால், அவதியடைந்த பயணிகள் பலர் மழையில் நனைந்தபடியும், பேருந்தின் ஓரமாக நின்று கொண்டும் பயணம் செய்தனர். இன்னும் சில பயணிகள் பேருந்திற்குள் குடை பிடித்துக் கொண்டு பயணம் செய்தனர். இதில் அவதியடைந்த மக்கள் கூறியதாவது, ‘தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பேருந்துகள் போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் இருக்கிறது. இதனால், அந்த பேருந்திற்கு பதில் புதிய பேருந்துகளை இயக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

 

 

Next Story

அரசுப் பேருந்து நடத்துநர் மோசடி! 

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

Government bus conductor fraud!

 

கடலூர் மாவட்டம், வடலூர், ஊமங்கலம் அருகே சேலத்திலிருந்து சிதம்பரம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று கடந்த இரு நாட்களுக்கு முன்பு வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் டிக்கெட் பரிசோதகர்கள் மழவேந்தி, உத்திராபதி ஆகியோர் பேருந்தை வழிமறித்து ஏறினார்கள். அப்போது அவர்கள் பயணிகளின் டிக்கெட்டை வாங்கி பரிசோதனை செய்தனர். அதில் ஒருவர் வைத்திருந்த டிக்கெட்டை பார்த்து சீரியல் எண் சரி பார்த்தபோது அந்த டிக்கெட் பழைய டிக்கெட் எனத் தெரியவந்தது.

 

பின்னர் பேருந்தில் இருந்த அனைத்துப் பயணிகளிடமும் டிக்கெட்டை பரிசோதித்துள்ளனர். இதில் பெரும்பாலான பயணிகளிடம் இருந்த டிக்கெட் ஏற்கனவே பயணம் செய்தவர்களின் டிக்கெட் என்றும் இது பழைய டிக்கெட் என உறுதியானது. இதனால் டிக்கெட் பரிசோதகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

பின்னர் பேருந்து நடத்துநரிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணான தகவலை கூறினார். அதன் காரணமாக அவரது பணப்பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் அவர் வைத்திருந்த டிக்கெட் பழைய டிக்கெட் அதிக அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேருந்தில் பயணிகளுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாத வகையில், சிதம்பரம் பேருந்து நிலையம் வந்து சம்பந்தப்பட்ட ஓட்டுநர் சத்தியமூர்த்தி மற்றும் நடத்துநர் நேரு ஆகிய இருவரையும் சேலம் போக்குவரத்துக் கழக பணிமனை அதிகாரிகளை வரவழைத்து ஒப்படைத்தனர்.

 

இவர்கள் நடத்திய விசாரணையில், நடத்துநர் பழைய டிக்கெட்டுகளை பயணிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்ததால் பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளனர். இந்த மோசடியில் ஓட்டுநர் சத்தியமூர்த்திக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் தொடர்பு இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.