தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளர் நல சங்கம் சார்பில் பல்லவன் இல்லம் அருகே பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதில் பேசிய அவர்கள், ‘அரசு பொறுப்பேற்று ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஆறு ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு ஓய்வு பெற்றவர்களுக்கும் வழங்க வேண்டும். வி.ஆர்.எஸ்.-ல் மரணமடைந்தவர்களுக்கும் ஓய்வுகால பணப்பலன்களை வழங்க வேண்டும். ஓய்வு பெறும் நாளன்றே பணப்பலன்களை வழங்க வேண்டும். வேலைவாய்ப்பில் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். 2003 பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க வேண்டும்’ எனப் பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தினர்.