Skip to main content

கந்து வட்டி, கஞ்சா விற்பனை, ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!" - கே.எஸ்.அழகிரி விருத்தாசலத்தில் பேட்டி!

Published on 09/06/2022 | Edited on 10/06/2022

 

Government of Tamil Nadu should take stern action to curb usury, cannabis sale and online gambling! "- Interview at KS Alagiri Vriddhachalam!

 

தமிழக  காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 

''தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மேடைப்பேச்சாளர் போல் பேசுகிறார். கொள்கை ரீதியாக வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் வார்த்தை பிரயோகம் இருக்கக்கூடாது. பா.ஜ.கவை விட காங்கிரஸ் கட்சி பல மடங்கு பெரிய கட்சி. நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சியை, பாஜக தலைவர் அண்ணாமலை சூடு, சுரணை இல்லை என்று சொல்லியிருப்பது விளம்பரத்திற்காக பேசுகிறார்.

 

சமீபத்தில் சென்னையில் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களில், 90% மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, தொடங்கப்பட்டது. தமிழக முதல்வர் தமிழர்களின் நலனுக்காகத்தான் பேசுவார். அதை தவிர்த்து பிரதமரிடம்  தமிழக மக்களை பற்றி முதல்வர் பேசாமல் என்  மீதுள்ள வழக்கெல்லாம் விட்டுடுங்க, எங்கள் மீது வழக்கெல்லாம்  போடாதீங்க?  என்றா கேட்க முடியும்? தமிழக முதல்வர் பேசியது மாநிலத்தின் தேவை பற்றியும், மாநிலத்தின் உரிமைகளை பற்றியும் சிறப்பாக பேசியதை படித்துப் பார்க்கும்போது மிகுந்த ஆச்சரியம் அடைந்தேன். ஒரு வார்த்தை கூட பிசிரில்லாமல் அழகாக சொல்லியுள்ளார். ஆனால் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழக முதல்வரைப் பற்றி கூறும்போது மேடையில் நாகரிகமாக நடந்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். பிரதமரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென விதிமுறைகள் உள்ளதா? தமிழக முதல்வர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு கூட பிரதமர் பதில் சொல்லவில்லை. சம்பந்தமில்லாத விஷயத்தை பேசி விட்டு சென்ற பிரதமரை, நான் சூடு சொரணை இல்லை என்று சொல்வது முறையா?

 

தமிழக அரசின் துறைகள் பற்றி பா.ஜ.க தலைவர் தவறான குற்றச்சாட்டுகளை கூறுகிறார். தெருவில் போகிறவர்கள் குற்றச்சாட்டு சொல்லலாம். பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டிற்கு வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி விளக்கமாக பதில் அளித்துள்ளார். முத்துசாமி அளித்த விளக்கத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? நான் தற்போது அவர்களை சூடு சொரணை இல்லை என கேள்வி கேட்கலாமா?

 

மாநிலத்தை ஆளக்கூடிய முதல்வருக்கு குடும்பம் இருக்கக்கூடாதா?, அது தவறா? மாநிலத்தில் எங்கு தொழில் நடந்தாலும்?, கட்டிடங்கள் கட்டப்பட்டாலும்? நிலம் வாங்கப் பட்டாலும்? அதற்கு முதல்வரின் குடும்பத்தில் தான் காரணம் என கூறுவதற்கு ஆதாரம் உள்ளதா? ஆதாரம் இருந்தால் கூறுங்கள் நாங்களும் கேட்டுக் கொள்கிறோம். நான் தி.மு.கவிற்கு வக்காலத்து வாங்கவில்லை. அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டிற்கு எவ்வித பொருளும் இல்லை,  குறைந்தபட்ச விளம்பரத்திற்காக  குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.

 

கடந்த ஓர் ஆண்டில் தி.மு.க அரசு சிறப்பாக செயல்படுகிறது. குறைகள் இல்லை என்று கூற மாட்டேன். குறைவான குறைகளோடு நடைபெறும் அரசாங்கமாக உள்ளது. பத்தாண்டு கால அ.தி.மு.க ஆட்சியையும், தி.மு.கவின் ஓராண்டு ஆட்சியையும் ஒப்பிட்டுப் பாருங்கள், அதில் குறைகள் இருந்தால் கூறுங்கள். நானும் சேர்ந்து விமர்சிக்கிறேன்" என்று கூறினார்.

 

பின்னர் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் பிரச்சினைகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,

 

"சிதம்பரம் நடராஜர் கோயிலில் தொடர்ச்சியாக பிரச்சினை இருந்து வருகிறது. பழமை வாய்ந்த அத்திருக்கோயிலில், தீட்சிதர்களுக்கு சிறப்பு உரிமை உள்ளது. அதனை தீட்சிதர்களும் தங்களது எல்லைக்குட்பட்டு நடந்து கொள்ள வேண்டும். புகழ்பெற்ற சைவ ஸ்தலமான சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு கரும்புள்ளி உள்ளது. இறைவனை வழிபாடு செய்ய சென்ற நந்தனாரை, தாழ்த்தப்பட்டவர் என்ற ஒரே காரணத்திற்காக கோவிலுக்குள் அனுமதிக்க வில்லை. அவர் வந்த பாதை கற்கள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. தற்போது சிதம்பரம் நடராஜர் கோவிலில் எழுந்துள்ள கணக்கு வழக்கு சம்பந்தமான பிரச்சனைகளை சுமூகமாக தீர்க்க வேண்டும், தீட்சிதர்கள் எல்லை மீறக்கூடாது. தமிழக முதல்வர் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்து பேச வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.

 

ஆன்லைன் சூதாட்டம் பற்றிய கேள்விக்கு, "ஆன்லைன் சூதாட்டம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆன்லைன் சூதாட்டத்தை கடுமையாக எதிர்க்க வேண்டும், அதற்கு தடை விதிக்க வேண்டும். அதேபோல் கந்துவட்டி செய்யும் கொள்ளைக்கார கும்பல் மீது காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றில் தமிழக முதல்வரும் கவனம் செலுத்த வேண்டும். மேலும் பள்ளி கல்லூரிகளில் கஞ்சா பழக்கம் அதிகரித்து வருகிறது. கஞ்சா விற்பனை செய்வதற்கு தனியாக கும்பல் உள்ளது.  கஞ்சா விற்பனை பற்றி போலீசாருக்கு தெரியாமல் இருக்காது. அவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் போட வேண்டும். அக்கும்பலை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" என்றும் அழகிரி கேட்டுக்கொண்டார்.

 

இந்த நேர்காணலின் போது விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன் உடனிருந்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சில உண்மைகளை சொன்னதால் எதிர்கட்சிகள் பீதியடைந்துள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Opposition parties panics because some truths have been told

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்கிடையில் அவர் தேர்தல் பரப்புரையில் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

PM Modi says Opposition parties panics because some truths have been told

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், டோங் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று (23-04-24) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சியில் ஹனுமான் பாடலைக் கேட்பது கூட குற்றமாகிவிடும். இந்த முறை ராம நவமி அன்று முதல் முறையாக ராஜஸ்தானில் ஷோபா யாத்திரை ஊர்வலம் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் போன்ற மக்கள் ராம்-ராம் எனக் கோஷமிடும் மாநிலத்தில் ராம நவமிக்கு காங்கிரஸ் தடை விதித்துள்ளது.

இன்று அனுமன் ஜெயந்தி அன்று உங்களுடன் பேசும் போது, சில நாட்களுக்கு முன் எடுத்த ஒரு படம் நினைவுக்கு வருகிறது. சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில், கடையில் அமர்ந்து ஹனுமான் பாடலை கேட்டதால், கடைக்காரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். நேற்று முன்தினம் ராஜஸ்தானில், நான் சில உண்மையை நாட்டுக்கு முன் வைத்தேன். ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளும் பீதியடைந்து உள்ளது. உங்களின் சொத்துக்களை அபகரித்து, சிறப்பு வாய்ந்தவர்களுக்குப் பங்கிட காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை நான் முன்வைத்தேன்.

அவர்களது அரசியலை நான் அம்பலப்படுத்தியதும், அவர்கள் மிகவும் கோபமடைந்து, அவர்கள் என்னை அவதூறாகப் பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் ஏன் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதை நான் காங்கிரஸிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் ஏன் தங்கள் கொள்கையை இவ்வளவு மறைக்கிறார்கள். நீங்களே கொள்கையை உருவாக்கியபோது, இப்போது அதை ஏற்க ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

Next Story

கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Karnataka Chief Minister Siddaramaiah struggle

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (23.04.2024) போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகிறது என கார்நாடக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், “காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கர்நாடக விவசாயிகளை வெறுக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மத்திய அரசுக்கு வறட்சி குறித்து குறிப்பாணை (memorandum) கொடுத்தோம். பிறகு மத்திய குழு வந்தது.  அதன் பின்னர் மாநிலத்தின் 223 தாலுகாக்களில் வறட்சி நிலவி வருவதை அமித் ஷா ஆய்வு செய்தார். இதுவரை காலதாமதமாக விவசாயிகளுக்கு 650 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவுக்கு உரிய நிவாரணம் வழங்காததற்கு நிர்மலா சீதாராமனும், நரேந்திர மோடியும் தான் காரணம்” எனத் தெரிவித்தார்.