Government of Tamil Nadu to renovate Samathuwapuram

தமிழகத்தில் சமத்துவபுர வீடுகளை புனரமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் முதல் கட்டமாக 149 சமத்துவபுரங்களில் உள்ள 14,800 வீடுகளை புனரமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதேபோல் 2008 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 4 சமத்துவபுரங்கள் கட்டப்பட்டு பயனாளிகளும் ஒப்படைக்கப்படாமல் இருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக சமத்துவபுரங்கள் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெறாத நிலையில் அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.