Published on 30/10/2021 | Edited on 30/10/2021

தடை செய்யப்பட்ட பட்டாசுகளைத் தயாரிக்கவோ, விற்கவோ, வாங்கவோ கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாகச் செயல்படுத்தும் வகையில் பேரியம் நைட்ரேட் கலந்த பட்டாசுகளுக்குத் தமிழகத்தில் தடை விதிக்கப்படுவதாகத் தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளைச் சேமித்து வைக்கவும், கொண்டு செல்லவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். சரவெடி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பட்டாசு வகைகளைப் பொதுமக்கள் வெடிக்கக் கூடாது எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.