Skip to main content

டெல்லி அரசிடம் இதைப்பற்றி பேசவே தமிழக அரசு பயப்படுகிறது- டி.டி.வி.தினகரன் சாடல்!

Published on 27/09/2018 | Edited on 27/09/2018

 

ttv

 

தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரத்தில் டெல்லியிடம் பேச தமிழக அரசு பயப்படுகின்றனர் என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

        

நேற்று இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விழுந்தமாவடி மீனவர்களை சந்தித்த அம்மா மக்கள் முனேற்ற கழகத்தின் துணைப் பொதுசெயலாளர் டிடிவி.தினகரன், அவர்களுக்கு ஆறுதல் கூறினார். 

 

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், " மீனவர்கள் பிரச்சனையில் தமிழக அரசு டெல்லி சென்று பேசுவதற்கே பயப்படுகின்றனர். மீண்டும் தேர்தல் வந்து நல்ல ஆட்சி அமைந்தால் மட்டுமே மீனவர்களின் பிரச்சனையை தீர்க்கமுடியும். மத்திய அரசிடம் உரிய அழுத்தம் கொடுத்து தமிழக மீனவர்களின் பிரச்னையை தமிழக அரசு தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.  கடற்கொள்ளையர்கள் விவகாரத்தில் இலங்கை அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்." என்றார் 

 

அதேபோல் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை கீழ்வேளூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மதிவாணன் உள்ளிட்ட திமுகவினரும் சந்தித்து ஆறுதல் கூறினர்.

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.