Skip to main content

சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் தீட்சிதர்களிடம் இருந்து கோயிலை அரசு மீட்க வேண்டும்- திருமுருகன்காந்தி

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த சனிக்கிழமை அன்று மகன் பிறந்த நாளையொட்டி வழிபடச் சென்ற கிராம சுகாதார செவிலியர் லதா(51) அங்கிருந்த தீட்சிதர் ஆபாச வார்த்தைகள் கூறி செவிலியரை கன்னத்தில் அடித்து கீழே தள்ளினார்.

 

 The government should restore the temple from the Dikshidars who engage in anti-social activities- thirumurugan gandhi


இந்தநிகழ்வு சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. இதனை அறிந்த பொதுமக்கள் தீட்சிதர்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட தீட்சிதர் தர்ஷன் என்கிற நடராஜா மீது சிதம்பரம் காவல்நிலையத்தில் பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையறிந்த தீட்சிதர் தலைமறைவாகியுள்ளார்.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட செவிலியர் வீட்டிற்கு மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வருகை தந்து பாதிக்கப்பட்ட செவிலியர் லதாவிற்கு ஆறுதல் கூறினார். மேலும் இந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

 

 The government should restore the temple from the Dikshidars who engage in anti-social activities- thirumurugan gandhi


அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் சிதம்பரம் கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற பெண்ணை தீட்சிதர் தாக்கியது மிகவும் கண்டனத்திற்குரியது, கோவிலில் சட்டத்திற்கு விரோதமாக பல்வேறு நடவடிக்கைகளை செய்து தீட்சிதர்கள் சமூக விரோதிகள் போல் செயல்படுகிறார்கள். இவர்களை பாதுகாக்கும் விதமாக காவல்துறை இன்னும் கைது செய்யவில்லை. சட்டம் சாதி பார்த்து செயல்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது என்றார்.

பிராமணர்கள் அல்லாத மற்றவர்கள் யாராவது இதுபோன்ற தவறு செய்து இருந்தால் அவர்களை அழைத்து வந்து உடனே கை கால் முறிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் காவல்துறையினர் ஏன் இவர்களை பாதுகாக்கிறார்கள் என கூறிய அவர் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டினார்.

விரைவில் சரியான நடவடிக்கை இல்லை என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து முற்போக்கு இயக்கங்களையும் ஒருங்கிணைத்து சிதம்பரத்தில் தீட்சிதர்களின் நடவடிக்கைகளை கண்டித்து போராட்டம் நடைபெறும் என அறிவித்தார்.

 

 The government should restore the temple from the Dikshidars who engage in anti-social activities- thirumurugan gandhi


நடராஜர் கோயில் இங்குள்ள ஏழை, எளிய விவசாய மக்கள் கட்டிய கட்டிடம். சூழ்ச்சியின் பெயரால் தீட்சிதர்கள் கைப்பற்றி கோவிலில் தமிழுக்கு தடை,. பொதுமக்களிடம் தீண்டாமையுடன்  நடப்பது, தமிழுக்கு விரோதமாகவும் பெண்களை கோவிலில் தாக்கும்  ரவுடிகள், குண்டர்கள் போலவும் செயல்படுகிறார்கள். எனவே நடராஜர் கோயிலை தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கையில் எடுத்து நிர்வாகிக்க வேண்டும். கோவிலில் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடும் தீட்சிதர்களை கோவிலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனைதொடர்ந்து சிதம்பரம் காவல் நிலையத்திற்கு வந்து செவிலியரை தாக்கிய தீட்சிதரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என காவல்துறையினரிடம் கேட்டனர் விரைவில் கைது செய்வதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதேபோல் அனைத்து சுகாதரசெவிலியர் சங்க மாநில செயலாளர் மணிமேகலை மற்றும் சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள்  சம்பந்தபட்ட செவிலியர் வீட்டிற்கு வந்து அவருக்கு ஆறுதல் கூறி செவிலியரை தாக்கிய தீட்சிதரை கைது செய்யாதது வன்மைக கண்டிக்கதக்கது என்றார்கள். மேலும் விரைவில் இந்த சம்பவத்தை கண்டித்து சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளதாக கூறியுள்ளனார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.