மேகதாதுதவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளைத் தடுப்பதற்குரிய அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் தமிழ்நாடுஅரசு மேற்கொண்டுவருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர், பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சனை குறித்துதமிழ்நாட்டின் நிலைப்பாட்டை விளக்கி, தமிழ்நாட்டுவிவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிலையில் இதுதொடர்பாக விவாதிப்பதற்காக இன்று (12.07.2021) தமிழ்நாடுமுதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், "மேகதாது அணை திட்டத்துக்கு கர்நாடகத்துக்கு எந்த அனுமதியும் மத்திய அரசு வழங்கக்கூடாது" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.