Skip to main content

“உண்மையான பயனாளிகளுக்கு அரசுத் திட்டம் சென்று சேரவேண்டும்”-அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. அறிவுரை

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

"The government should go and join the scheme for the real beneficiaries" - MLA to the authorities

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் தமது தொகுதிக்கு உட்பட்ட அரசு அதிகாரிகளுக்கு அரசுத் திட்டங்கள் குறித்து அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதன்படி, அவர் அதிகாரிகளிடம் கூறும்போது, “தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மாநிலத்தின் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக பல்வேறு திட்டப் பணிகளை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறார்.

 

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்டு அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்ட அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களையும் மீண்டும் உயிர் கொடுத்து அதைச் சிறப்பாக செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துள்ளன. அந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் கிராமத்தில் 100 சதவீத வளர்ச்சியை எட்டும் வகையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு கிராமம் நகரத்துக்கு இணையாக அனைத்து வளர்ச்சியையும் பெறும். இதன் மூலம் கிராமம் தன்னிறைவு அடையும்.

 

அந்த வகையில் இந்தத் திட்டம் மெருகேற்றப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட உள்ளது. அதே போல் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்வதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் முதல்வர் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார். அவரது எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் அரசு அதிகாரிகள் இதுபோன்ற திட்டப் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும்.

 

மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தேர்வு செய்ய கிராம அளவில் அமைக்கப்பட்டுள்ள ஊராட்சி செயலர், மகளிர் திட்டக் குழு உறுப்பினர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பயனாளிகளைத் தேர்வு செய்யும்போது கட்சி பாகுபாடு இன்றி ஏழை எளிய மக்களைத் தேர்வு செய்ய வேண்டும். அவர்கள் வாழ்வு இதன் மூலம் முன்னேற்றம் அடையும் பொருளாதார அடிப்படையில் அந்தக் குடும்பம் மேம்படும். அதன் அடிப்படையில் பயனாளிகள் பட்டியலைத் தயார் செய்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

 

இதன் மூலம் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள ஏழ்மை நிலையிலுள்ள மக்களுக்குச் சென்றடையும். இதுபோன்ற திட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றிட அரசுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்” என அதிகாரிகளுக்கு தனது அறிவுறுத்தலை தெரிவித்துள்ளார். அரசின் மக்கள் நலத் திட்டங்கள் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்படுகிறதோ அதன்படி முறையான பயனாளிகளுக்குச் சென்று சேர வேண்டும் என்பதில் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் கண்ணும் கருத்துமாக இருந்து வருவதாக தொகுதி மக்கள் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்