Skip to main content

“உ.பி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்” - விசிக ந.செல்லத்துரை!

Published on 09/10/2020 | Edited on 09/10/2020

 

UP government should be dismiss

 

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் தலித் பெண் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், அவரது உடலை அவரின் பெற்றோரிடமும்கூட கொடுக்காமல் காவல்துறையே தகனம் செய்ததும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் சமூக அமைப்புகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வி.சி.க. மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ந.செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பொருளாளர் முகமது யூசுப், துணைப் பொதுச் செயலாளர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, கவுதம சன்னா, வன்னி அரசு, ஆளூர் ஷாநவாஸ், இளஞ்சேகுவேரா, மாவட்டச் செயலாளர்கள் இரா.செல்வம் பெ.ரவிசங்கர் வி.கோ.ஆதவன், பு.அன்புச்செழியன் ச.அம்பேத்வளவன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

 

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் நம்மிடம் பேசிய வி.சி.க. மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ந.செல்லத்துரை, "ஹத்ராஸ் பகுதியில் தலித் பெண் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார். அதன்பின், அப்பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின் அவரது உடலை பெற்றோர்களிடம் ஒப்படைக்காமல் காவல்துறையினரே தகனம் செய்கிறார்கள். இந்த விவகாரம் நாடு முழுக்கப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் அந்தப் பகுதியின் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், அப்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அவர் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து இருக்கிறார் எனத் தெரிவிக்கிறார். இது தடையத்தையும் உண்மையையும் அழிக்கும் செயல் என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்தச் சமயத்தில் அந்த மாநிலத்தின் முதல்வர், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல், நிவாரண நிதி எதுவும் வழங்காமல், அதை நியாயப்படுத்தும் வகையில் ‘இது அரசைக் கலங்கப்படுத்தக்கூடிய போராட்டமாகப் பார்க்கிறேன் என்றார். மேலும், இந்தப் போராட்டம் தொடர்ந்தால், வழக்குகள் தொடரப்படும்’ என ஆளுங்கட்சியினர் மிரட்டுகின்றனர். 

 

Ad

 

இதை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. ஐ.நா.வே நேரடியாகத் தலையிட்டு இந்த விஷயத்தைக் கண்டித்த பிறகும், பிரதமர் மோடி கண்டனத்தையோ வருத்ததையோ தெரிவிக்காதது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. ஆகவே பிரதமர் மோடியையும் வி.சி.க கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இதற்கு ஆறுதல் சொல்லவந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை தள்ளிவிட்டு அச்சுறுத்துகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியிடம் போலீஸார் நடந்துகொண்ட விதத்தையும் வி.சி.க கண்டிக்கிறது. மனித உரிமை மீறலில் காவல்துறை ஈடுபடுகிறது. சிறுபான்மை மக்களுக்கும் தலித் பெண்களுக்கும் தலித்களுக்கும் பாதுகாப்பு தரமுடியாத, ஜனநாயக விரோத ஆட்சியை உடனடியாக 356-ஆவது பிரிவைப் பயன்படுத்தி மோடி அரசு டிஸ்மிஸ் செய்யவேண்டும் என வி.சி.க வலியுறுத்துகிறது.” எனத் தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.