Skip to main content

"விவசாயிகளை வஞ்சிக்கும் சர்க்கரை ஆலைகளைத் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்! " - கே.பாலகிருஷ்ணன் பேட்டி!

Published on 30/06/2022 | Edited on 30/06/2022

 

l;'

 

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்திலுள்ள ஸ்ரீஅம்பிகா சர்க்கரை ஆலை மற்றும் எ.சித்தூரிலுள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை ஆகிய 2 சர்க்கரை ஆலைகளுக்கும் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கரும்பு அனுப்பிய வகையில் சுமார் 200 கோடி நிலுவைத் தொகை பாக்கி வைத்துள்ளது. மேலும் விவசாயிகள் பெயரில் சுமார் 250 கோடி வங்கிகளில் கடன் பெற்றுள்ளது. இதனால் நிலுவைத் தொகை கிடைக்காமலும், கடன் தொகை கட்ட முடியாமலும் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.  இதனால் நிலுவைத் தொகை வழங்கக் கோரியும், கடன் தொகையைத் தள்ளுபடி செய்யக் கோரியும் இப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

இந்த நிலையில் 2 சர்க்கரை ஆலைகளையும் தனியாருக்கு விற்று விட்டதாகவும், அவர்கள் சாராய தொழிற்சாலையாக மாற்றுவதற்கு முயல்வதாகவும் கூறப்படுகிறது. அதையடுத்து இந்த ஆலைகளைத் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும், விவசாயிகளுக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், விவசாயிகள் பெயரில் ஆலை நிர்வாகம் வங்கிகளில் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், தொழிலாளிகளுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்பு பயிர்களுடன் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, " தமிழகத்தில் உள்ள விவசாயிகள் நெருக்கடியில், உள்ளனர். விவசாயிகள் உற்பத்தி செய்த கரும்பு, நெல்லிற்காக மத்திய அரசு பல்வேறு நிபந்தனைகளை வகுத்துள்ளதால், விவசாயிகள் முழுமையாக உற்பத்தி செய்ய முடியவில்லை. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அம்பிகா மற்றும் ஆரூரான் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளை மொட்டை அடித்து விட்டு, திவால் என அறிவித்துவிட்டன. கரும்பு விவசாயிகளுக்கு,  தரவேண்டிய 200 கோடியை ஏமாற்றி விட்டன.  விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் 300 கோடி ரூபாய் கடன் வாங்கியது விசித்திரமாக உள்ளது. 300 கோடி பெற்றுக்கொண்ட ஆலை நிர்வாகத்தின் செயலினால் விவசாயிகளுக்கு நோட்டீஸ் வருகிறது. ஏற்கனவே விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை 200 கோடி உள்ள நிலையில் கூடுதலாக, ஆலை நிர்வாகம் பெற்ற தொகைக்கு நோட்டீஸ் வருவதால் கடலூர் மாவட்ட விவசாயிகளின் நிலைமை,  நிலத்தை விற்றுவிட்டு தலையில் துண்டு போட்டுவிட்டுப் போக வேண்டிய நிலைக்குத் தான் தள்ளப்பட்டுள்ளனர். 

 

மோசடி செய்த ஆலை நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிந்தும், ஆலை நிர்வாகத்தின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யாமல், கைது செய்யப்படாமலும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆலை நிர்வாகம் மீது வழக்குப் போடப்பட்டும், அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு அரசுகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது விவசாயிகளை மோசடி செய்த இரண்டு ஆலைகளையும் தனியார் நிறுவனத்திற்கு விற்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. எனவே தமிழக முதல்வர் இதில் அக்கறை செலுத்த வேண்டும். தமிழக முதல்வரும், கடலூர் மாவட்டத்தில் உள்ள அமைச்சர்களும் துரிதமாக நடவடிக்கை எடுத்து, இரண்டு ஆலைகளையும் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்" என்று கூறினார். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் விவசாயிகள் சார்பில்  கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.