Skip to main content

அரசு பள்ளிகளை மூடுவதை அரசு கைவிட வேண்டும்; பாவலர் க.மீனாட்சி சுந்தரம் பேச்சு!!

Published on 21/09/2018 | Edited on 21/09/2018

அரசு பள்ளிகளை மூடுவதை கைவிட்டு தனியார் பள்ளி கட்டமைப்பை போல் அரசு பள்ளி கட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். ஆங்கிலத்தை ஒருபாடமாக வைத்து தமிழ்வழி பாடத்தை ஊக்குவிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் பாவலர் க.மீனாட்சி சுந்தரம் பேசினார்.

 

புதுக்கோட்டையில்  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் முப்பெரும் விழா புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள எஸ்.வி.எஸ்.திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாவட்டத் தலைவர் பெ.அழகப்பன் தலைமையில்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்துணைத் தலைவர்கள் ம.சிவா,ச.சவரிமுத்து ,மாவட்டத் துணைச் செயலாளர்கள் து.அந்தோணிமுத்து,ரெ.சண்முகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     

tn  govt

 

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் மாவட்டச் செயலாளர் க.சு.செல்வராசு வரவேற்றுப் பேசினார். புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு, திருமயம் சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி, ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

 

மன்றத்தின் மாநில பொதுச்செயலாளர் க.மீனாட்சிசுந்தரம் விழாவில் பேசியதாவது: அனைத்து துறைக்கும் முன்னோடியாக இருப்பது கல்வித்துறையே. வருங்கால தலைவர்களை, விஞ்ஞானிகளை, அறிவாளிகளை,தொழில்நுட்பவல்லுநர்களை எல்லாம் வளர்த்து விடுவது ஆசிரியர்கள் தான்.. எழுத்தறிவித்தவன் இறைவன் என்று கூறப்பட்டு வந்த ஆசிரியர்களை பார்த்து இன்றைக்கு இருக்கிற  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒருமையில் பேசுகிறார். அவரது துறையில் உள்ள அமைச்சர் கே.சி.விரமணியும் டாஸ்மார்க்கில் இருந்து வரும் பணத்தில் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குகிறோம் என்கிறார்.. ஆகவே இப்படிபட்ட பண்பில்லாமல் பேசும் முதலமைச்சர், அமைச்சர் வீரமணியை கண்டித்து மாநிலம் முழுவதும் ஒரு நாள் கண்டன ஆர்பாட்டம் நடத்தினோம். இனியும் அவர்கள் அவ்வாறு பேசினால் வருகின்ற அக்டோபர் 4 ஆம் தேதி சிறு விடுப்பு போராட்டமும், அடுத்து நவம்பர் 27 ஆம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டமும் நடத்த இருக்கிறோம். 

 

 

போராட்டத்தை ஆயத்தம் செய்யும் வகையில் அக்டோபர் 13 ஆம் தேதி சேலத்தில் காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் தொழிற்சங்க தலைவர்கள், மக்கள் மேல் அனுதாபம் கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள் கலந்து கொள்கிறார்கள். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்திலேயே கூட போராடிய எங்களை அழைத்து ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்களை அழைத்து அரசு ஊழியர் ஆக்கினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூட போராடிய எங்களை அழைத்து பேசி உதவி தொடக்க கல்வி அலுவலர் பதவியை இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கினார். 

 

The govt

 

இன்று ஆசிரியர்களுக்கு பெரும் சலுகைகள் அனைத்தையும் வழங்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தான். பெருந்தலைவர் காமராஜர் கிராமம்  தோறும் பள்ளிகளை தொடங்கினார். அவரை தொடர்ந்து டாக்டர் கலைஞர் பள்ளிகள் இல்லாத ஊரே தமிழ்நாட்டில் இருக்க கூடாது என முடிவு எடுத்து பல்லாயிரக்கணக்கான பள்ளிகளை திறந்து வைத்தார். ஆனால் இன்று பள்ளிகளை மூடி அதற்கு இணையாக மதுக்கடைகளை திறந்து வைக்கிறார்கள். இப்போது உள்ள அமைச்சர் செங்கோட்டையன் கூட அரசுப் பள்ளி மூடப் போவதாக கூறியுள்ளார். பள்ளி, கல்லூரிகளை நடத்தும் தனியார்களிடம் உரிய ஆதாயத்தை பெற்றுக் கொண்டு அப்பள்ளிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அரசு பள்ளிகளை மூடுகிறார்கள்.

 

 

இதை வன்மையாக கண்டிக்கிறேன். எனவே அரசு பள்ளிகளை மூடுவதை கைவிட்டு தனியார் பள்ளி கட்டமைப்பை போல் அரசு பள்ளி கட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். ஆங்கிலத்தை ஒரு பாடமாக வைத்து தமிழ்வழி கல்வியை ஊக்குவிக்க வேண்டும். மேலும் நாங்கள் இரண்டு ஆண்டுகளாக 114 சங்கங்கள் சேர்ந்து நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம்.  பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். இடைநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்கள் அமைச்சுப் பணியாளர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப் பட வேண்டும். ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். தொகுப்பூதியத்தை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்கப் பட வேண்டும். 21 மாத ஊதிய நிலுவை வழங்க வேண்டும் அரசு எங்களுக்கு வழங்க வேண்டும் என்றார்.

 

முன்னதாக பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர்கள் சி.கண்ணன், ச.குணசேகரன், கி.ஜெசிந்தாமேரி ஆகியோருக்கும் புதுமைப்பள்ளி, கனவு ஆசிரியர் விருதுபெற்ற வீ.ஜோதிமணி, க.சுகுமாரி, வ.தங்கத்துரை மற்றும் முனைவர் இராதாகிருஷ்ணன் விருதுபெற்ற தலைமையாசிரியர் அ.பிலிப், தி.செயா ஆகியோருக்கும் கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி இயக்க ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 

பின்னர் தமிழக ஆசிரியர் கூட்டணியில் இருந்து விலகி வெ.யோகராஜ், தி.அம்பிகாபதி தலைமையில் கறம்பக்குடி ஒன்றிய ஆசிரியர்களும், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியிலிருந்து விலகி ந.இரவிச்சந்திரன் தலைமையில் அன்னவாசல் ஒன்றிய ஆசிரியர்களும், க.பழனிவேலு தலைமையில் கந்தர்வக்கோட்டை ஒன்றிய ஆசிரியர்களும்     தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்..

மாநில,மாவட்ட ஒன்றிய  பொறுப்பாளர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.. விழாவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்டப் பொருளாளர் சு.அங்கப்பன் நன்றி கூறினார்

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

பரிதாபமாக உயிரிழந்த பெண் ஆய்வாளர்; உடலைச் சுமந்து சென்ற எஸ்.பி!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

புதுக்கோட்டை நகரில் பழைய மருத்துவமனைக்கு அருகே பல வருடங்களாக செயல்படாத சிக்னல் அருகே நகராட்சி சார்பில் ஞாயிற்றுக் கிழமை மதியம் திடீரென பெரிய திண்ணை போல வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில், எந்தவிதமான எச்சரிக்கை அடையாளமும் வைக்கவில்லை, வெள்ளைக் கோடுகள் போடவில்லை. சில மணி நேரங்களுக்குள் திடீர் வேகத்தடையில் பலர் கீழே சாய்ந்தனர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

அதே போல திருச்சி திருவரம்பூர் 2 காவல் நிலைய ஆய்வாளர் பிரியா தன் குழந்தைகளைப் பார்க்க இரவு பேருந்தில் வந்து இறங்கியுள்ளார். அவரது கணவர் புல்லட்டில் வந்து வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது பிரதான சாலையில் அடையாளமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள திடீர் வேகத்தடையில் ஏறி இறங்கும் போது பினனால் இருந்த ஆய்வாளர் பிரியா கீழே சாய பின்பக்கம் தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த ஆய்வாளரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் செவ்வாய் கிழமை (09.04.2024) காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பெண் காவல் ஆய்வாளர் படுகாயமடைந்த பிறகு யாரோ கோலமாவு வாங்கி அடையாளமிட்டனர். அதன் பிறகு இரவில் நகராட்சி நிர்வாகம் அடையாள வெள்ளைக் கோடுகள் போட்டுள்ளனர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

இந்த நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த ஆய்வாளர் பிரியா உடல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு மாலையில் அவரது சொந்த ஊரான நெடுவாசல் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே, டிஎஸ்பிக்கள் ஆலங்குடி பவுல்ராஜ், புதுக்கோட்டை ராகவி, கோட்டைப்பட்டினம் கெளதம் மற்றும் போலீசார் சல்யூட் அடித்து அஞ்சலி செலுத்தினர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு நடந்த இறுதி ஊர்வலத்தில் எஸ்.பி வந்திதா பாண்டே, உறவினர்களுடன் சேர்ந்து ஆய்வாளர் பிரியாவின் உடலை மயானத்திற்கு தூக்கிச் சென்றது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து ஆய்வாளர் பிரியாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

புதுக்கோட்டை நகராட்சியில் தீடீரென அமைக்கப்பட்ட வேகத்தடையில் எச்சரிக்கை அடையாளப் பதாகை, வெள்ளைக் கோடு போடாமல் அலட்சியமாக இருந்ததால், ஆய்வாளர் உயிர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.