Skip to main content

தேர்வு காலத்தில் மாணவ, மாணவியர்களுக்கு உணவு வழங்கி இரவு பாடசாலை நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!

Published on 01/04/2022 | Edited on 01/04/2022

 

Government school teachers who provide food to students and run night school during the exam period!

 

அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் காலையில் பள்ளிக்கு வந்தோமா, மாலை பள்ளி நேரம் முடிந்து வீட்டிற்கு சென்றோமா என்று இல்லாமல், அரசுப் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் சில ஆசிரியர்கள் செயல்படுவதால், அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இது பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரின் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

 

இந்தநிலையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே சி முட்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ளது. அந்தப் பள்ளியை சுற்றியுள்ள கிராமங்களான மண்டபம், கீழமூங்கிலடி, மடுவங்கரை, குண்டு மேடு நவாப்பேட்டை, பெரிய மதகு, தில்லைவிடங்கன், கீழ் அனுவம்பட்டு, மேல் அனுப்பம்பட்டு, அம்பு பூட்டிய பாளையம், தீர்த்தாம்பாளையம், தையா குப்பம், அம்பலத்தாடி குப்பம் உள்ளிட்ட 15- க்கும் மேற்பட்ட உள் கிராம பகுதிகளில் இருந்து 747 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.  

 

ஆண்கள் 79 பேர், பெண்கள் 38 பேர் என மொத்தம் 117 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றனர். அதேபோல், பன்னிரண்டாம் வகுப்பில் 83 பேர் படித்து வருகின்றனர். இதில் 48 பேர் ஆண்கள், 37 பேர் பெண்கள் ஆவர். இவர்களுக்கு வரும் மே மாதம் தேர்வு நடைபெற உள்ளதால், கிராமப்புறத்தில் உள்ள மாணவர்களுக்கு தனி வகுப்பு எடுத்து படிக்க சூழ்நிலை மற்றும் வசதி இல்லாத காரணத்தால் பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் மணிவாசகம் பள்ளியில் உள்ள ஆசிரியர்களை சுழற்சி முறையில் ஒருங்கிணைத்து மாணவர்களை மாலையில் பள்ளி நேரம் முடிந்து மற்ற மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களை பள்ளியிலேயே தங்க வைக்கிறார். இதில் மாணவர்களை கூட்டு கல்வி கற்கும் முறையில் மாணவ, மாணவிகளை கூட்டம், கூட்டமாக தனித்தனியாக மரத்தடியில் அமரவைத்து தேவையான மின்விளக்குகளை அமைத்துக் கொடுத்து தேர்வில் வெற்றிபெற பயிற்சிகளை கொடுக்கிறார்கள். 

Government school teachers who provide food to students and run night school during the exam period!

அதேநேரத்தில் மாணவர்களின் உடல்நிலையை கருதில் கொண்டு மாலை 06.00 மணிக்கு சுண்டல் வழங்கப்படுகிறது. மேலும், இரவு 08.00 மணி வரை மாணவர்கள் கல்வி கற்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். இரவில் அவர்கள் வீடு செல்லும்போது, அவர்களுக்கு இரவு உணவு வழங்கப்படுகிறது. கிராமப்புறத்தில் வரும் மாணவர்கள் இரவு நேரத்தில் வீட்டிற்கு செல்ல முடியாத சூழலில் தனி வாகனம் ஏற்பாடு செய்து, அவர்களை வீட்டிற்கு அழைத்து சென்று விடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதை அனைத்தும் பெற்றோர்களின் அனுமதியுடன், இப்பள்ளியில் ஆசிரியர்கள் செய்வதால் பெற்றோர்கள் மத்தியிலும், அனைத்து தரப்பினர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிவாசகம் கூறுகையில், "இந்த பள்ளி கிராமப்புறப்பள்ளி. இங்கு வரும் அனைத்து மாணவர்களும் மிகவும் நலிவடைந்த கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள். இவர்கள் அரசு தேர்வுகளில் நன்கு படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு தேர்வு காலங்களில் இதுபோன்று சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. கடந்த 2019- ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருவதாகவும், இதுபோன்ற பயிற்சி மூலம் முதலாம் ஆண்டில் 99 சதவீதமும், இரண்டாம் ஆண்டில் 98 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

Government school teachers who provide food to students and run night school during the exam period!

அக்காலத்தில் அவர்களின் கிராமத்திற்குச் சென்று ஒரு இடத்தில் அனைவரையும் சமூக இடைவெளியுடன் அமரவைத்து பகல், இரவு நேரத்தில் பாடம் நடத்தியுள்ளோம். இந்த தேர்வுக்கு கடந்த மார்ச் 3- ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 30- ஆம் தேதி வரை தனி வகுப்புகள் நடைபெறும். ஒரு நாளைக்கு மாணவர்களுக்கு சாப்பாடு, சுண்டல் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் ரூபாய் 6,300, இதனை நண்பர்கள் மற்றும் இதனை அறிந்தவர்கள் மூலமாக பெற்று மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம். 

 

இதற்கு பள்ளி ஆசிரியர்கள் பாடத்திற்கு ஏற்றவாறு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். பள்ளியில் தலைமை சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும். எனவே மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும் என்பதே எங்களின் இரவு பாடசாலையின் நோக்கம்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.