Skip to main content

வீடு வீடாகச் சென்று மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்!

Published on 21/11/2020 | Edited on 22/11/2020

 

Government school teacher who went door to door and gave scholarships to medical college students!

 

தமிழக அரசின் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில், 399 அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பிற்காகச் சேர்ந்துள்ளனர். 6 பி.டி.எஸ் இடங்கள், பணம் கட்ட முடியாது என்பதால், யாரும் தேர்வு செய்யாமல் காலியாக உள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 மாணவ, மாணவிகள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 3 மாணவ, மாணவிகள் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், ஒரு மாணவர் தனியார் பல் மருத்துவமனையிலும் சேர்ந்துள்ளனர்.
 

இதில், கீரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து, 5 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். இவர்களில் செரியலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை, ஒரே வகுப்பில் படித்த 3 மாணவ, மாணவிகளுக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. இந்த மாணவ மாணவிகளை வீடு வீடாகச் சென்று பாராட்டி இனிப்பு வழங்கிய பள்ளி ஆசிரியர் அன்பரசன், ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கினார். மேலும், உதவிகள் செய்வதாகக் கூறினார்.

 

Government school teacher who went door to door and gave scholarships to medical college students!


அதேபோல புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு கிராமத்தில், உள்ள அரசுப் பள்ளியில் படித்து, கோவை தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவி காயத்ரியை, அவரது குடிசை வீட்டில் சந்தித்த ஆலங்குடி திமுக எம்.எல்.ஏ மெய்யநாதன், மாணவிக்கு சால்வை அணிவித்துப் பாராட்டியதுடன், கல்வி உதவியாக ரூ. 25 ஆயிரம் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். நேற்று, வெள்ளிக்கிழமை 11 அரசுக் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர், தனது சி.வி.பி பேரவை சார்பில், தலா ரூ. 50 ஆயிரம் வழங்கினார். ஏழை மாணவர்களின் கல்விக்காகப் பலரும் உதவிகள் செய்யும் நிலையில், மேலும் உதவிகள் கிடைத்தால் நல்லது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.