Skip to main content

எல்.கே.ஜி யில் ஒரே நாளில் 120 குழந்தைகளை சேர்த்த அரசுப்பள்ளி.. குழந்தைகளுக்கு பாதுகாப்பு கருவி பொருத்தப்படுவதால் பெற்றோர்கள் ஆர்வம்...

Published on 04/06/2019 | Edited on 04/06/2019

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் எல்.கே.ஜி. வகுப்புகளுக்காக பெருங்களூர் அரசு மேல்நிலைப் பள்ளியை தேர்வு செய்தனர். அதே போல மாவட்டம் முழுவதும் சுமார் 85 அரசு பள்ளிகள் எல்.கே.ஜி தொடங்கப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் மாவட்டம் முழுவதும் சுமார் 1200 குழந்தைகளை பெற்றோர் அரசு பள்ளிகளில் உள்ள எல்.கே.ஜியில் சேர்த்துள்ளனர். இதில் பெருங்களூர் முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மட்டும் சுமார் 10 கிராமங்களில் இருந்து 120 குழந்தைகளை சேர்த்து ஆசிரியர்களையும், அதிகாரிகளையும் திணறவைத்துவிட்டனர் பெற்றோர்கள். இதற்கு அந்த பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் சங்கம் மற்றும் ஆர்வமுள்ள பெற்றோர்கள் தான் காரணம் என்கிறார்கள் பெற்றோர்களே. 

 

government school lkg admissions

 

அதாவது அரசு பெருங்களூர் மேல்நிலைப் பள்ளியை முன்மாதிரி பள்ளியாக அறிவித்து அதற்காண நிதி ஒதுக்கீடு செய்தாலும் வகுப்பறைகள் கட்டப்படவில்லை. இருப்பினும் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் 4 வகுப்பறைகளை தனியாக ஒதுக்கி வண்ணம் தீட்டி அந்த வகுப்பறைகளுக்குள் சின்னக் குழந்தைகளை கவரும் வண்ணத்தில் விளையாட்டுப் பொருட்களை வாங்கி வைத்ததுடன் அந்த வகுப்புகளில் மட்டுமின்றி வெளியிலும் 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினார். அதே போல மாணவர்களை கவரும் சித்திரங்களும், அவர்களுக்கென ஒளிப்படக் காட்சிகளும் தயாரானது. 

இத்தனையும் செய்து முடித்த பிறகு பெருங்களூர் சுற்றியுள்ள கூப்பாச்சிப்பட்ட்டி, வாராப்பூர், மணவிடுதி, மங்களத்துப்பட்டி, மாட்டப்பட்டி, பொக்கிசக்காரன்பட்டி இப்படி 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெற்றோர்களை சந்தித்து சிறப்புகளை கூறியதுடன் பெற்றோர்களையும் அழைத்து வந்து பள்ளியை காட்டினார். வந்து பார்த்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க ஒத்துக் கொண்டனர். ஆனால் சின்னக் குழந்தைகள் கூடுதல் பாதுகாப்பு வசதி என்ன செய்யப் போறீங்க என்று பெற்றோர்கள் கேட்ட பிறகு உதித்தது தான் மாணவர்களின் பாதுகாப்புக்காக அவர்களின் சட்டையில் ஒட்டும் அலார்ட் அலாரம். அதாவது மாணவனின் சட்டையில் அந்த கருவியை ஒட்டிவிட்டால் அந்த மாணவன் 20 மீட்டர் தாண்டினால் அதன் மெயின் கருவியில் அலாரம் அடிக்கும் பெற்றோருக்கு குறுஞ்செய்தி போகும். அந்த கருவி பொருத்தப்படும் என்று சொன்னதுடன் முதல்கட்டமாக 3 கருவிகளை வைத்து சோதனையும் செய்து காட்டப்பட்ட பிறகு பெற்றோர்கள் பயமின்றி மாணவர்களை சேர்க்கத் தொடங்கிவிட்டார்கள். ஒரு கருவியின் விலை ரூ. 800 விரைவில் பல கருவிகள் வாங்கி வந்து மாணவர்களுக்கு பொருத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

 

government school lkg admissions

 

அதே நேரத்தில் பொக்கிசக்காரன்பட்டி கிராமத்தில் இருந்து தூரம் அதிகம் என்பதால் 15 குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆசைப்பட்டாலும் தூரம் ஒரு தடையாக உள்ளது அதே போல கட்டிட வசதிகளும் குறைவாக உள்ளது. முதல்கட்டமாக ஒரே நாளில் 120 குழந்தைகள் சேர்க்கப்பட்டதும் குழந்தைகளை பார்த்துக்கொள்ள 3 பேர் நியமிக்கப்பட்டனர். அரசு போதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதை பொருத்தே அடுத்த ஆண்டின் சேர்க்கை இருக்கும். தொடக்க நாளில் 120 குழந்தைகள் சேர்க்கை அடுத்தடுத்த நாட்களில் 100 குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனாலும் வாகன வசதியும் தூரமும் தடையாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பெருங்களூர் முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி வகுப்பினை தொடங்கி வைத்துப் பேசிய முதன்மைக் கல்வி அலுவர் வனஜா, "புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதால் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை தவிர்த்து அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்ற ஆண்டுகளில் எல்லாம் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கல்வி ஆண்டு தொடக்கத்தில் ஜீன் மாதம் மேற்கொள்வதே வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதியே நடத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி இருந்தோம். அதைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்புகள் தொடங்கி பிளஸ் 2 வரை மாணவர்கள் சேர்க்கை நடந்து வந்ததால் இன்று மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக  புதுக்கோட்டை ஒன்றியம் பெருங்களூர் முன் மாதிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி பிரிவில் 120 மாணவர்களை சேர்த்துள்ளனர் என்பது பெருமையாக உள்ளது. இன்னும் 50 க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிகழ்வை பார்க்க மகிழ்வாக உள்ளது. எனவே  பெருங்களூர் அரசு முன் மாதிரி மேல்நிலைப்பள்ளியில்  குழந்தைகளை சேர்த்த பெற்றோர்களுக்கும், மாணவர்கள் சேர்க்கை உயர காரணமான இருந்த  தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்" என்றார்.

தொடர்ந்து மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல், பள்ளி தலைமையாசிரியர் பெ.ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் தயாராகிவிட்டனர். அதே நேரத்தில் அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்பதே பெற்றோர்களின் விருப்பம். அரசுப் பள்ளிகளை கனவுப்பள்ளிகளாக்க முன்னாள் மாணவர்களின் சேவையும் அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.