Skip to main content

‘அரசு பள்ளி முதல்... உயரிய விருதுவரை...’ - முன்னாள் மாணவரை பாராட்டிய சங்க கூட்டத்தினர்!

Published on 13/12/2021 | Edited on 13/12/2021

 

‘From government school ... to the highest award ...’ - Association meeting praises alumni

 

விருத்தாசலம் பெரியார் நகரைச் சேர்ந்த விருத்தகிரி - சாவித்திரி தம்பதியின் மகன் மோகன்தாஸ். விருத்தாசலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1976 முதல் 1980வரை  9ஆம் வகுப்பு முதல் 12 வகுப்புவரை படித்துள்ளார். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் படித்துள்ளார். சென்னை எம்ஐடியில் விருத்தாசலம் லைன்ஸ் கிளப் உதவியுடன் தனது உயர் கல்வியை முடித்த இவர், இந்தியக் கப்பற்படையில் சேர்ந்துள்ளார்.

 

இவரது சிறப்பான பணியால் இந்திய கப்பற்படையின் ரியர் அட்மிரலாக பதவி உயர்வு பெற்ற இவருக்கு 2013ஆம் ஆண்டு இந்தியாவின் கப்பற்படைத்துறையில் சிறப்பாகச் சேவையாற்றியதற்காக விசிட்ட சேவா விருது வழங்கப்பட்டது. 2021 பிப்ரவரியில் ஓய்வுபெற்ற மோகன்தாஸ் அவரது மனைவி தயாமோகன் மற்றும் பிள்ளைகள் சீனா மோகன், சித்தார் மோகனுடன் விருத்தாசலம் பெரியார் நகரில் வசித்துவருகிறார். இவரது மகனும் மகளும் தற்போது அமெரிக்காவில் பணிபுரிகின்றனர்.

 

‘From government school ... to the highest award ...’ - Association meeting praises alumni

 

இந்திய கப்பற்படையில் அமைதி காலத்தில் சிறப்புமிகு சேவையாற்றியதற்கான உயரிய படைத்துறை விருதான அதி விசிட்ட சேவா விருது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கப்பற்படையின் ரியர் அட்மிரலாக பணியாற்றி ஓய்வுபெற்ற மோகன்தாஸ்க்கு கடந்த நவம்பர் மாதம் வழங்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், விருத்தாசலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சங்கக் கூட்டத்தில், தலைவர் அருணாச்சலம், செயலாளர் வழக்கறிஞர் பாலச்சந்தர், பொருளாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் குடியரசுத் தலைவர் விருது பெற்ற முன்னாள் மாணவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் மோகன்தாஸை பாராட்டினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமை ஆசிரியரின் கீழ்த்தரமான செயல்! ஆவேசமான பெற்றோர்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
POCSO Case register on government school teacher

ஓமலூர் அருகே, சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்து, சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள செம்மண்கூடல் ஊராட்சிக்கு உட்பட்ட, கந்தம்பிச்சனூரில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 128 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். வாழப்பாடி அருகே உள்ள சோமம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், சில மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்கள் கிளம்பின. 

இதையறிந்த பெற்றோர்கள் திரண்டு சென்று மார்ச் 11ஆம் தேதி காலை, பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியை இழுத்து மூடி பூட்டு போட்டு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். திடீரென்று மக்கள் திரண்டு வந்து மறியலில் இறங்கியதால் அந்தப் பகுதியே களேபரமாக மாறியது. இந்நிலையில், தகவல் அறிந்த தாரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் சந்தோஷ் மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஊழியர்களும் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரிடம் பேசினர். 

அப்போது அவர்கள், தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனை உடனடியாக பணியிடைநீக்கம் மற்றும் கைது செய்யும்படி ஆவேசமாக கூறினர். மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தகவலை முன்பே அறிந்து இருந்தும் அதை தெரியப்படுத்தாமல் மூடி மறைத்த ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கோரினர். பள்ளியில் அனைத்து வகுப்பு அறைகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தவும் கோரிக்கை விடுத்தனர். 

பெற்றோர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும், நிகழ்விடத்திலேயே தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனை பணியிடைநீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் சந்தோஷ் உத்தரவிட்டார். இதையடுத்து பெற்றோர்கள், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே, ஓமலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் ராதாகிருஷ்ணன் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பள்ளி மீதான இதர புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தால் கே.ஆர்.தோப்பூர் - முத்துநாயக்கன்பட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Next Story

மாணவிகளிடம் ஆபாசப்படம் காட்டிய அரசுப்பள்ளி ஆசிரியர் கைது

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Government school teacher arrested under pocso

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள புக்கம்பட்டி அரசுத் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் ஜியாவுல்ஹக். இவர், தன்னுடைய பள்ளியில் படித்து வரும் மாணவிகளை தனியாக அழைத்து, அலைபேசியில் ஆபாசப்படங்களைக் காண்பித்து, பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவிகள் பலர், பள்ளிக்குச் செல்ல மறுத்து வீட்டிலேயே இருந்துள்ளனர். இதுகுறித்து அவர்களின் பெற்றோர்கள் விசாரித்தபோதுதான், ஆசிரியர் ஜியாவுல்ஹக்கின் தகிடுதத்தங்கள் வெளியே தெரியவந்தன. 

அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், இதுபற்றி பள்ளித் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, தலைமை ஆசிரியர் தனம், மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன்னுடைய லீலைகள் காவல்துறை வரை சென்றதை அறிந்த ஆசிரியர் ஜியாவுல்ஹக், திடீரென்று தலைமறைவானார். முதல்கட்ட விசாரணையில் ஜியாவுல்ஹக் மீதான புகாரில் உண்மை இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

தீவிரமாகத் தேடப்பட்டு வந்த நிலையில், பிப். 17ம் தேதி ஆசிரியர் ஜியாவுல்ஹக்கை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, அவரை மத்திய சிறையில் அடைத்தனர். பாலியல் விவகாரத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம், மேச்சேரி சுற்று வட்டாரத்திலும், தொடக்கக் கல்வித்துறை வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.