Skip to main content

'அரசு திட்டங்கள் தகுதியான பயனாளிக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்'-அமைச்சர் சக்கரபாணி பேச்சு

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
'Government schemes should be ensured to be available to eligible beneficiaries'-Minister Chakrapani's speech

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் அனைத்துதுறை அரசு அலுவலர்களுடன் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், 'தமிழக அரசு தமிழக மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அரசு திட்டங்களின் பயன்கள் தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் கிடைப்பதை அரசு அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மக்கள் தொடர்பு முகாம், மக்களுடன் முதல்வர், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், உங்களைத் தேடி உங்கள் ஊரில் போன்ற முகாம்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும், அரசு திட்டங்களின் பயன்கள் கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு, அரசு திட்டங்களின் பயன்கள் தகுதியான பயனாளிகளுக்கு சென்றடைவதை அரசு அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம், இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் திட்டங்களின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நிலம் கண்டறியப்பட்டுள்ளன. விவசாயம் மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டிற்காக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. விவசாயிகள் தங்கள் விவசாய தொழிலை சிரமமின்றி தொடர்ந்து மேற்கொள்ள அரசின் மானிய திட்டங்கள் பெரிதும் உதவியாக அமைகின்றன. இதுபோன்ற திட்டங்கள் விவசாயிகளின் செலவை குறைக்கும் வகையில் உதவியாக உள்ளன. எனவே, வேளாண் திட்டங்களான, சொட்டு நீர் பாசனம், நுண்ணீர் பாசனம், வேளாண் உபகரணங்கள், வேளாண் இடுபொருட்கள் போன்ற மானிய திட்டங்கள் விவசாயிகளுக்கு சென்றடைவதை உறுதி படுத்த வேண்டும்.

பெண்கள் மேம்பாட்டிற்காக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், திருமண நிதியுதவித் திட்டம், மகப்பேறு நிதியுதவித் திட்டம், வருவாய்த்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள் தகுதியான பயனாளிகள் விடுபட்டு விடாமல் கிடைக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பித்து விடுபட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில், அந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதி இருப்பின் அவர்களும் இந்தத் திட்டத்தில் பயனடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.அரசு நலத்திட்டங்களின் பயன்கள் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் தகுதியான நபர்கள் விடுபட்டு விடாமல் பயனாளிகளை தேர்வு செய்திட வேண்டும்'' என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.