Skip to main content

'அரசு அதிகாரிகள் அரசியல் செய்தால் அதிரடியாக மாற்றப்படுவார்கள்'-அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

Published on 11/06/2023 | Edited on 11/06/2023

 

'Government officials will be changed immediately if they do politics' - Minister I.Periyaswamy's speech

 

ஆத்தூர் தொகுதியில் பொதுமக்களுக்கு அரசு நலத் திட்டங்களை செயல்படுத்தும் அரசு அதிகாரிகள் அரசியல் செய்தால் அதிரடியாக மாற்றப்படுவார்கள் என அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரித்துள்ளார்.

 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி ஆத்தூர் தொகுதி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு வழங்கியதோடு, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பொதுமக்களுக்கு தீர்வு வழங்கினார். குறிப்பாக ஆத்தூர் தொகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரசு வேலைவாய்ப்பு, இடமாறுதல், பட்டா வழங்க கோரிக்கைவிடுத்தல், கிராமங்களில் நாடக மேடை மற்றும் சாலை வசதி, தெருவிளக்கு வசதி, உட்பட பல்வேறு கோரிக்கைகளுடன் மனுக்களை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கொடுத்து தீர்வு பெற்றனர்.

 

 

'Government officials will be changed immediately if they do politics' - Minister I.Periyaswamy's speech

 

அப்போது ஒரு சில ஊராட்சி மன்ற தலைவர்கள் அதிமுக ஆட்சியின் போது அவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் மீது எந்த நடவடிக்கை எடுப்பதில்லை என புகார் செய்தனர். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியின் நாயகன், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்களுக்கு வாரி வழங்கும் மக்களாட்சி நடைபெற்று வருகிறது. அரசு அதிகாரிகள் தமிழக அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை முறையாக பாகுபாடு இன்றி செயல்படுத்த வேண்டும். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு செயல்பட்டது போல் அரசு அதிகாரிகள் அரசுப் பணியில் அரசியல் செய்ய நினைத்தால் ஒருபோதும் விட மாட்டோம். ஆத்தூர் தொகுதியில் அரசியல் செய்ய நினைக்கும் அதிகாரிகளுக்கு இடமில்லை. அவர்கள் அதிரடியாக பணியிடை மாற்றம் செய்யப்படுவார்கள் என்றார். அப்போது ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர் ஒன்றியம் சீவல்சரகு ஊராட்சியைச் சேர்ந்த ஜெ.ஜெ.நகர் நெசவாளர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் பத்து வருடங்களாக சாலை வசதி, குடிதண்ணீர் வசதி, தெருவிளக்கு வசதிகள் செய்து கொடுக்க பலமுறை மனுக் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என என்றனர்.

 

உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ,பெரியசாமி நெசவாளர் காலனி பொதுமக்கள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளி ஒருவர் தனக்கு மின் மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனம் வேண்டுமென கோரிக்கை விடுத்தவுடன் உடனடியாக அவருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க நடவடிக்கை எடுத்ததால் மாற்றுத்திறனாளி மகிழ்ச்சியுடன் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றி தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“இந்தியா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும்” -அமைச்சர் ஐ.பெரியசாமி!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு ஓரளவுக்கு நடந்து வருகிறது. காலை ஏழு மணிக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கள்ளிமந்தையத்தில்  தனது வாக்கை பதிவு செய்தார். அதுபோல் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தம் ராமலிங்கம்பட்டியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவி சுசிலாவுடன் உடன் திண்டுக்கல் கோவிந்தாபுரம் ஸ்ரீவாசவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “இந்தியா கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி  மத்தியில் ஆட்சி அமைக்கும். வட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு அலைகள் அதிகமாக உள்ளது. 150க்கும் குறைவான இடங்களை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும். எப்பொழுதும்  போலவே  குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளேன்” என்று கூறினார்