Skip to main content

திண்டுக்கல்லில் ஒரு அத்திப்பட்டி!;கருணை காட்டுவார்களாக அரசு அதிகாரிகள்!!

Published on 16/11/2018 | Edited on 16/11/2018

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம் ஒரு அத்திப்பட்டி கிராமம் போல் உள்ள கொல்லப்பட்டி கிராம மக்கள் அதிகாரிகளின் கருணை பார்வைக்காக ஏங்குகின்றனர்.

 

 

• 6 வருடங்களாக முறையாக தண்ணீர் சப்ளை செய்வதில்லை என புகார்.

• 3 நாட்களுக்கு ஒருமுறை குளிக்கும் பள்ளி மாணவர்கள்.

• 90 குடும்பம் வசிக்கும் வீட்டில் 200 குடும்பங்கள் இருப்பதால் நாடக மேடையில்      தூங்கும் முதியோர்கள்.

 

water

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அம்பாத்துரை ஊராட்சி பகுதியில் உள்ளது கொல்லப்பட்டி கிராமம். 90 குடும்பங்கள் சுமார் 300 பேர் வசிக்கின்றனர். அனைவரும் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அனைத்து குடும்பத்திலும் உள்ள மகன்கள் மற்றும் மகள்களுக்கு திருமணம் ஆகி அதே வீட்டில் வசிப்பதால் அவர்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது. சரியான கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள் சீமைக்கருவேல மரங்களின் மறைவிடத்தையும், மரத்தடி மறைவையும் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் கொல்லப்பட்டி கிராம மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி சின்னாளபட்டியில் உள்ள தம்பித் தோட்டம்  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிராமத்தில் உள்ள முதியோர்கள் தங்களது வீட்டில் படுக்க இடம் இல்லாததால் இரவு நேரங்களில் நாடக மேடையில் தான் அனைவரும் தூங்குவதற்கு பயன்படுத்துகின்றனர்.

 

 

இதனால் அவர்கள் கொசுக்கடிக்கு ஆளாகி பலருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தங்கள் கிராமத்திற்கு (கொல்லப்பட்டி) அம்பாத்துரை ஊராட்சி நிர்வாகம் சார்பாக வடிகாலை சுத்தம் செய்ய ஆட்களை அனுப்புவதில்லை எனவும், இதனால் தங்கள் கிராமத்தில் வசிக்கும் பள்ளி மாணவர்கள் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஆகிய நோய்களுக்கு ஆளாவதாக குறை கூறுகின்றனர். 

 

water

தங்கள் கிராமத்திற்கு குடிதண்ணீர் விநியோகம் செய்தவற்காக போடப்பட்ட ஆழ்துளை கிணற்றை முறையாக பராமரிப்பது இல்லை எனவும், பம்ப் ஆப்ரேட்டர்கள் முறையாக மின் மோட்டார்களை இயக்குவதில்லை எனவும் குறை கூறுகின்றனர். இதனால் தங்கள் கிராமத்திற்கு ஆறு வருடங்களாக குடிதண்ணீர் விநியோகம் செய்வதில்லை என கொல்லப்பட்டி கிராம மக்கள் கண்ணீர் விடுகின்றனர். 

 

குடிதண்ணீருக்காக இவர்கள் டிராக்டர் மூலம் தனியார்கள் கொண்டு வரும் குடிதண்ணீரை குடம் ஒன்றுக்கு ரூ.5 விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். தினசரி கூலி வேலைக்குச் செல்லும் இவர்கள் வாங்குகின்ற சம்பளம் 100ல் 30 முதல் 40 ரூபாய் வரை குடிதண்ணீருக்காக செலவிடுகின்றனர். குடிதண்ணீர் பற்றாக்குறையால் பள்ளிக்குச் செல்லும் தங்கள் குழந்தைகளை 3 நாட்களுக்கு ஒருமுறை தான் குளிப்பாட்டி அனுப்பும் அவலநிலையில் உள்ளனர். 

 

தங்கள் கிராமத்தில் உள்ள சுகாதார சீர்கேடுகள், குடிதண்ணீர் பற்றாக்குறை குறித்து ஊராட்சி செயலர்கள் முறையாக வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமோ, ஊராட்சி உதவி இயக்குநரிடமோ, திட்ட இயக்குநரிடமோ தெரிவிப்பது எனவும் கிராம மக்கள் கூறுகின்றனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு செம்பட்டியில் உள்ள ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயச்சந்திரன் அவர்களிடம் தங்களது கிராமத்தின் அவலநிலை குறித்து, நாங்கள் முறையிட்டதால் உடனடியாக டிராக்டர் மூலம் குடிதண்ணீர் விநியோகம் செய்ய உத்தரவிட்டார். ஒரு மாத காலம் தண்ணீர் விநியோகம் செய்தனர். அதன்பின்னர் தண்ணீர் வருவதில்லை. ஊராட்சி செயலர்கள் எங்கள் கிராமத்தை புறக்கணித்து வருவதால் ஆத்தூர் ஒன்றியத்தில் அத்திப்பட்டி கிராமம் போல் எங்கள் கிராமம் எந்த ஒரு நலத்திட்டத்தையும் பெறாத கிராமமாக உள்ளது. தொடர்ந்து இந்த நிலை நீடிப்பதால் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டுகளை ஒப்படைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்கள் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் கருணையுடன் ஏற்று எங்கள் கிராமத்தில் நிலவும் சுகாதார சீர்கேடுகள் குடிதண்ணீர் பற்றாக்குறைகள், கழிப்பறை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.