Skip to main content

நீதிமன்றம் சொல்லியும் சாதி சான்றிதழ் மறுக்கும் அரசு அதிகாரிகள்; போராடிய மக்களை கைது செய்த கால்வதுறை

Published on 06/07/2022 | Edited on 06/07/2022

 

Government officials denying caste certificate despite being told by the court  fought!

 

தமிழ்நாட்டில் குருமன்ஸ் சாதி மக்கள் பழங்குடியின பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் பரவலாக வசிக்கிறார்கள். தமிழ்நாட்டில் சில லட்சம் மக்கள் உள்ளதாக கூறுகின்றனர்.

 

1954 ஆம் ஆண்டு முதல் குருமன்ஸ் மக்களுக்கு எஸ்.டி சான்றிதழ் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருகிறது. குருமன்ஸ் சாதியை தவிர்த்து வேறுசில சாதியினர் குருமன்ஸ் சாதியினர் எனச்சொல்லி போலியாக சாதி சான்றிதழ் பெருகிறார்கள் என வருவாய்த்துறைக்கு வந்த பல புகார்களின் அடிப்படையில் எஸ்.டி சான்றிதழ் வழங்குவது கடுமையாக்கப்பட்டது.

 

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு, தானிப்பாடி, போந்தை, சாத்தனூர், வானாபுரம் போன்ற பகுதிகளை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள், ‘நாங்கள் குருமன்ஸ் சாதியினர். முன்பு எங்களை குரும்ப கவுண்டர் என அழைப்பார்கள். ஆவணங்களில் அதுவே பதிவாகிவிட்டது. இதனால் எங்களை நீங்கள் குருமன்ஸ் இல்லை குரும்பகவுண்டர் சாதி எனச்சொல்லி வருவாய்த்துறை அதிகாரிகள் சான்றிதழ் தரமறுக்கிறார்கள்.

 

நாங்கள் குருமன்ஸ் என்பதற்கான தொல்லியல் ஆதாரம் உள்ளது. இதற்காக அரசாங்கம் அமைத்த ஆய்வுக்கமிட்டி எங்கள் கிராமங்களில் ஆய்வு செய்து அதன் அறிக்கையை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளது. நீதிமன்றம் ஆய்வு செய்து குருமன்ஸ் மக்களுக்கு எஸ்.டி சான்றிதழ் தரச்சொன்னது. ஆனால் வருவாய்த்துறையினர் தரமறுக்கிறார்கள். தாத்தா, அப்பாக்களுக்கு குருமன்ஸ் என சாதி சான்றிதழ் உள்ளது. அவர்களின் பிள்ளைகளுக்கு எஸ்.டி சான்றிதழ் தரமறுக்கிறார்கள். எம்.பி.சி என சான்றிதழ் தருகிறோம் என்கிறார்கள். சாதி சான்றிதழ் கிடைக்காமல் பிள்ளைகளால் மேல்படிப்பு படிக்கவோ, அரசு உதவித்தொகை, விடுதி ஒதுக்கீடு போன்றவற்றையோ பெறமுடியவில்லை’ என்றார்கள்.

 

ஜீலை 4 ஆம் தேதி காலை குருமன்ஸ் சாதி சான்றிதழ் கேட்டு திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குள் காத்திருப்பு போராட்டத்தை பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடங்கினர். இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் அன்றைய இரவு நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் அலுவலகத்திலேயே தங்கி, உணவு, தண்ணீர் வாங்கி வரச்சொல்லி சாப்பிட்டுவிட்டு, கொசுக்கடியில் அங்கேயே உறங்கி போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

 

Government officials denying caste certificate despite being told by the court  fought!

 

இரண்டாவது நாளாக 5ஆம் தேதியும் போராட்டம் தொடர்ந்தது. பள்ளி பிள்ளைகள் 50க்கும் அதிகமானோர் இதில் கலந்துகொண்டனர். மதியம் 3 மணியளவில் வேலூர் சரக டி.ஐ.ஐீ ஆனிவிஜயா, எஸ்.பி பாலகிருஷ்ணன், இராணிப்பேட்டை எஸ்.பி தீபாசத்தியன் தலைமையில் 300க்கும் அதிகமான போலீஸார், அதிரப்படையினர், கமாண்டோ படையினர் களமிறக்கப்பட்டனர். போராட்டம் செய்த மக்களை இவர்கள் சுற்றி வளைத்தனர். காவல்துறை அதிகாரிகள் போராட்டம் செய்த மக்களுடன் சமாதானம் பேசினார்கள், மக்கள் சமாதானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

 

வருவாய்த்துறை – போராட்டக்காரர்கள் – காவல்துறை என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஜீலை 8, 9 தேதிகளில் முதலமைச்சர் அரசு முறை பயணமாக ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க திருவண்ணாமலைக்கு வருகிறார். இந்த நேரத்தில் போராட்டம் செய்வது சரியில்லை, பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும். அதனால் உங்க கோரிக்கை குறித்து மனு தாருங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என அதிகாரிகள் சொன்னதை போராட்டக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

 

Government officials denying caste certificate despite being told by the court  fought!

 

உடனே போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்களை சுற்றி வளைத்த காவல்துறையினர், 60 வயதுக்குட்பட்ட 200க்கும் அதிகமான ஆண்களை கைது செய்தனர். வயதானவர்களை வீட்டுக்கு அனுப்பினர். போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள், பள்ளி மாணவ – மாணவிகள், சிறு பிள்ளைகள் கைது செய்வதில் பாகுபாடு காட்டவேண்டாம் எங்களையும் கைது செய்யுங்கள், எங்களுக்காகத்தான் அவர்கள் போராடுகிறார்கள், நாங்களும் போராடினோம் என மறியல் செய்தனர். அவர்களை மிரட்டியும், சமாதானம் செய்தும் போலீஸ் வேனில் ஏற்றினர்.

 

கடந்த 5 ஆண்டுகளாக பலமுறை இம்மக்கள் சாதி சான்றிதழ் கேட்டு பலவிதமான போராட்டத்தில் ஈடுபட்டனர். வாரக்கணக்கில் கோட்டாட்சியர் அலுவலகத்துக்குள் அமர்ந்து போராட்டம் செய்தனர். இப்போதும் போராட்டம் செய்கின்றனர். ஆனால் இன்னும் அவர்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை.

 

படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன் 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.