Skip to main content

இட புரோக்கர் செய்த காரியத்தால் சிக்கிய அரசு அதிகாரிகள்! 

Published on 19/08/2021 | Edited on 19/08/2021

 

Government officials caught up in what the real estate broker did

 

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி உமா மகேஷ்வரி. இவரிடம் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற இட புரோக்கர் கடந்த 2018ஆம் ஆண்டு அரசு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான இடத்தைக் குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். பின்னர் அந்த இடத்தைப் பட்டா செய்து தருவதாக சிறிது, சிறிதாக 70 லட்சம் வரை வாங்கியதாக தெரிகிறது. இதில், அப்போதைய மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவியாளர், கம்யூட்டர் ஆப்பரேட்டர், ஆண்டிபட்டி துணை வட்டாட்சியர் ஆகியோர் மூலம் உமா மகேஷ்வரிக்கு போலி பட்டா தயார் செய்து கொடுத்துள்ளார்.

 

அந்த இடத்தினைப் பத்திர பதிவுசெய்ய அப்போதைய ஆண்டிபட்டி சார் பதிவாளர் பல லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு பத்திரம் பதிவு செய்யாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், போலியாக பட்டா தயார் செய்ததாகவும், பணம் வாங்கிக்கொண்டு பத்திரப் பதிவு செய்யவில்லை எனக் கூறியும் உமா மகேஷ்வரி ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனை விசாரித்த ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் மகேந்திரா வர்மா, இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 15 நபர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

 

அதன்பேரில் ஆண்டிபட்டி போலீசார் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த புரோக்கர் ராஜா, அவருடைய மனைவி ரேவதி, மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவியாளர் தங்கபாண்டி, ஆண்டிபட்டி தாலுகா அலுவலக கம்யூட்டர் ஆப்பரேட்டர் சதீஸ், இதில் சம்பந்தப்பட்ட சக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், வைகை புதூர் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார், தங்கராஜ், பிராதுகாரன்பட்டியைச் சேர்ந்த சரவணன், ரமேஷ், கன்னியப்பபிள்ளைபட்டி கிராமத்தைச் சேர்ந்த உதயபாண்டி, ஆண்டிபட்டி சீனிவாச நகர் பகுதியைச் சேர்ந்த சதீஸ், அப்போதைய ஆண்டிபட்டி துணை வட்டாட்சியர் அப்துல் நசீர் (தற்போது தேனி டாஸ்மாக் மேனேஜராக உள்ளார்), அப்போதைய ஆண்டிபட்டி சார்-பதிவாளர் உஷாராணி (தற்போது தேனி சார்-பதிவாளராக உள்ளார்),

 

அப்போதைய சின்னமனூர் இன்ஸ்பெக்டர் மாயன் (தற்போது ராயப்பன்பட்டி இன்ஸ்பெக்டராக உள்ளார்), அப்போதைய சின்னமனூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் (தற்போது திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் உள்ளார்) உள்ளிட்ட 15 பேர் மீது போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 15 பேர் மீது வழக்குப் பதிவுசெய்ய உத்தரவிட்டுள்ள நிலையில், போலீசார் அவர்கள் மீது தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையின் முடிவில் வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.