Skip to main content

“கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க.. இல்லைன்னா...” - தொழிலாளர்களிடம் லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகள்

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

Government officials asking bribe from workers in Dharapuram

 

‘கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க.. இல்லனா உங்களுக்கு தான் கஷ்டம் ஆயிடும்.. புரிஞ்சதா’ என தொழிலாளர்களிடம் லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகளின் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது அலங்கியம் கிராமம். இங்குள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தாராபுரம், அலங்கியம், தளவாய்பட்டினம், கொளத்துப்பாளையம் உள்ளிட்ட ஏழு இடங்களில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, தற்போது நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

 

இதற்கிடையில், அலங்கியம் அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்குமாறு சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் அதிகாரிகள் வற்புறுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால், கடந்த 20 நாட்களாக அரசு அதிகாரிகளுக்கும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்பதற்காக தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

 

அப்போது, விவசாயிகளிடம் யாரும் லஞ்சம் வாங்கக் கூடாது என உடன்பாடு ஏற்பட்ட நிலையில், நெல் கொள்முதல்கள் சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் 40 கிலோ நெல் மூட்டைக்கு பத்து ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் லஞ்சம் தர மறுத்ததால், தொழிலாளர்களிடம் நெல் கொள்முதல் செய்ய வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

அதே சமயம், அலங்கியம் அரசு கொள்முதல் நிலையத்தில் உள்ளூர் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பதிலாக வடமாநிலத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இத்தகைய சம்பவங்களால் கடந்த 2, 3 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாமல் இருப்பதால் நெல்மணிகள் குவியல் குவியலாகத் தேங்கிக் கிடக்கிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில், லஞ்சம் கேட்கும் அதிகாரிகளின் செல்போன் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

- சிவாஜி

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.