Skip to main content

“கடன்களை வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” - போராட்டத்தில் ஈடுபடவுள்ள வங்கி ஊழியர் சங்கத்தினர்!

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

Government must take action to collect debts

 

பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து வரும் 16, 17 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. திருச்சியில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க முயற்சியில் ஒன்றிய அரசு ஆர்வம் காட்டுவது அதிர்ச்சி அளிக்கின்றது.

 

பொதுத்துறை வங்கிகள் நஷ்டத்தில் இயங்குவதாகவும் அதனால்தான் தனியார்மயமாக்கப்படுவதாகவும் கூறுவது முறையல்ல. அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் இயங்கிவருகின்றன. பொதுத்துறை வங்கிகளில் 6 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. அது மிகப்பெரிய தனியார் தொழில் நிறுவனங்களுக்கும் தனியார் நிறுவன உரிமையாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அவற்றை வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து கடன் செலுத்தும் பட்டியலில் உள்ள நபர்களிடமும் பங்குகளை விற்பனை செய்வது தவறான செயல்.

 

இது நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றது இல்லை. மேலும், பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் திட்டத்தைக் கண்டித்து, அத்திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வரும் 16, 17 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது. இதில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.