சென்னை உயர்நீதிமன்றத்திற்கும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்கள் 44 பேரை தற்காலிகமாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 29 அரசு வழக்கறிஞர்களும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு 15 அரசு வழக்கறிஞர்களும் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.