Skip to main content

துயரத்திலும் ஆச்சர்யப்படுத்தும் கேரளா அரசு- நன்றிக்கெட்ட தமிழக அரசு

Published on 17/08/2018 | Edited on 27/08/2018

வரலாற்றில் இல்லாத அளவுக்கு கேரளா மாநிலத்தில் மழை பெய்து வருகிறது என்கிறது கேரளா அரசும், வானிலை அமைப்பும். கேரளாவில் உள்ள மலப்புழா, இடுக்கு உட்பட 10 மாவட்டங்கள் மழை நீரால் தத்தளிக்கின்றன. கேரளாவின் வரலாற்றில் முதல் முறையாக அனைத்து அணைகளும் திறந்தவிடப்பட்டுள்ளன. வீடுகள் மூழ்கியுள்ளன, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, சாலைபோக்குவரத்துக்கான பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. உதவிப்பொருள்களை கூட முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அனுப்பிவைக்க முடியாமல் தவிக்கின்றது அரசாங்கம்.

 

கேரளாவின் வெள்ள பாதிப்புகளை காண மத்திய அரசின் உள்துறை அமைச்சர்  கேரளா முதல்வர் மற்றும் எதிர்கட்சிகட்சி தலைவரோடு சேர்ந்து விமானத்தில் பார்வையிட்டு சென்றார். அவர் டெல்லி சென்றபின் மத்தியிலும் ஆளும் மோடி சர்க்கார், கேரளாவுக்கு வெறும் 100 கோடியை மட்டும் நிவாரண நிதியாக வழங்கியுள்ளது.

 

kerala

 

 

 

இதனால் அதிருப்தியான கேரளா முதல்வர் பினராயிவிஜயன், பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளோம். இதிலிருந்து மீண்டு வர மக்கள் தங்களால் முடிந்த உதவிகளை வழங்க வேண்டும் என வெளிப்படையாக வேண்டுக்கோள் விடுத்தார். இதனை ஏற்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு பண உதவி வழங்கப்பட்டு வருகிறது. முக்கிய பிரமுகர்களோ, சாதாரணமானவர்களோ யாராக இருந்தாலும் உதவி வழங்க வந்தால் அதனை நேரடியாகவே பெற்றுக்கொள்கிறார் கேரளா முதல்வர். அவர்களுக்கு அப்போதே நன்றியும் தெரிவிக்கிறார். நெட் பேங்கிங் மூலமாகவும் பலரும் பணம் அனுப்புகிறார்கள்.

 

அப்படி பணம் அனுப்பியவர்களை ஆச்சர்யப்படுத்துகிறது கேரளாவின் நிதியமைச்சகம். முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நேரடியாக பணம் தந்தவர்களின் முகவரி மற்றும் நெட்பேங்கிங் மூலமாக பணம் அனுப்பியவர்களின் முகவரிக்கு உடனடியாக அவர்கள் அனுப்பிய தொகையை பெற்றுக்கொண்டோம் என கேரளா நிதியமைச்சக முதன்மை செயலாளர் கையெழுத்திட்டு கடிதம் அனுப்புகிறார். அந்த அரசு கடித எண் மற்றும் முத்திரை, கையெழுத்திடப்பட்ட அந்த கடிதத்தில் அனுப்பிய தொகை, எந்த வழியில் பணம் வந்தது அதுப்பற்றிய விவரத்தோடு அந்த கடிதம் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

kerala

 

 

 

முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் வழங்குபவர்களுக்கு முறையாக நன்றி தெரிவித்து கடிதம் தரும் சம்மந்தப்பட்ட மாநில அரசு. இதுநடைமுறை. மக்களை காக்க வேண்டிய பெரும் நெருக்கடியில் உள்ள கேரளா அரசின் உயர் அதிகாரிகள், அத்தனை நெருக்கடிக்கு மத்தியிலும் நிதியுதவி அளித்தவர்களுக்கு முறையான நன்றியும், கடிதமும் உடனே அனுப்புகிறது. கடிதம் பெற்றவர்கள் பெரும் ஆச்சர்யத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

 

2015ல் தமிழகத்தில் கடுமையான மழை பெய்தது. செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதன் மூலம் சென்னையே தத்தளித்தது. மின்சாரம்மில்லாமல், உணவுப்பொருள் இல்லாமல், இருக்க இடம்மில்லாமல் மக்கள் தவித்தனர். தவித்த மக்களுக்கு தமிழகம் மற்றும் பிற மாநில பகுதிகளில் இருந்து மக்களால், சமூக சேவை அமைப்புகளால் அனுப்பப்பட்ட நிவாரண பொருட்களில் அதிகாரிகளின் துணையோடு அதிமுகவினர் ஜெ படம் போட்ட ஸ்டிக்கர் ஓட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அப்போது தமிழகம் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு சில ஆயிரம் முதல் கோடிகள் வரை பணமாக, காசோலையாக தமிழக முதல்வராக இருந்த ஜெ, மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் பலரும் வழங்கினார்கள். அப்படி வழங்கப்பட்ட தொகைக்கு இன்று நன்றி எனக்கூறி இன்றுவரை ஒரு நன்றிக்கடிதம் அனுப்பவில்லை தமிழகரசு என்கிறார்கள் நிதியுதவி வழங்கியவர்கள்.

 

உதவி செய்பவர்களுக்கு நன்றி தெரிவித்து நன்றியோடு உள்ளது கேரளா அரசு. 2015ல் நிதியுதவி வழங்கியவர்களுக்கு நன்றி எனச்சொல்லாமல் இன்றுவரை நன்றிக்கெட்டதனமாக உள்ளது தமிழகரசு

சார்ந்த செய்திகள்

Next Story

மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Police register cheating case against producers of Manjummel Boys

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ad

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் வுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.