Skip to main content

வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி! 

Published on 08/08/2022 | Edited on 08/08/2022

 

government job scam

 


திருச்சி மாவட்டம், துறையூர் சிறுநாவலூர் பகுதியைச் சேர்ந்த ரகுநாதன்(39), சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் பி.பி.எட் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 2ஆம் தேதி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், திருச்சி மாவட்ட அதிமுக அலுவலகத்திற்கு நான் எனது நண்பர்களுடன் அடிக்கடி சென்று வந்தநிலையில், மேலசிந்தாமணியைச் சேர்ந்த திருச்சி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் சகாதேவ் பாண்டியன் என்பவர் எனக்கு அறிமுகமாகினார். அதே சமயத்தில் சகாதேவ் பாண்டியனின் தம்பி என்று பிரவீன் என்பவர் அறிமுகமாகி தன்னுடைய அண்ணன் சகாதேவ் பாண்டியன் கட்சியில் பெரிய பொறுப்பில் இருக்கிறார். அவர் மூலம் நான் பணியிடமாறுதல், அரசு வேலை என்று பலருக்கு வாங்கி தந்துள்ளேன். உங்களுக்கும் அரசு வேலை வேண்டுமென்றால் என்னைத் தொடர்புகொள்ளுங்கள் என்று அவருடைய செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். 

 

கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 லட்சம் ரூபாய் பிரவீன் வங்கி கணக்கில் செலுத்தினேன். என்னுடைய சேமிப்பும் என்னுடைய மனைவியின் நகை உள்ளிட்டவற்றை அடமானம் வைத்து மொத்தம் 7 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தேன். மேலும் என்னுடைய நண்பர்களுக்கும் வேலை வாங்கி தருவதாக கூறியதன் பேரில், துறையூர் சிறுநாவலூரை சேர்ந்த தீனதயாளன் 4 லட்சமும், கண்ணன் 50 ஆயிரமும்,  ராமநாதபுரம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் 50 ஆயிரமும், வண்ணான்குண்டு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் 2 லட்சமும், வேள்ளகளி பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் 2 லட்சமும், எஸ்.வி.மங்களம் பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் 2 லட்சமும், முத்துமாலை என்பவர் 1 லட்சமும் என மொத்தம் 19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வேலை வாங்கி தருவதாக கூறி சகாவேத் பாண்டியனை நேரில் சந்தித்து அவர் உறுதியளித்ததின் பேரில் பிரவீன் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். 

 

ஒரு மாதத்தில் வேலை வாங்கி தருவதாக கூறியவர் இன்றுவரை வேலை வாங்கி தரவில்லை. கொடுத்தப்பணத்தை திரும்ப கொடுக்கவுமில்லை, பணம் கேட்கும்போதெல்லாம் வேலை நிச்சயம் வாங்கி தருகிறேன் என்றுகூறி பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர். எனவே நாங்கள் அவா்களிடம் கொடுத்த பணத்தை திரும்ப பெற்று தந்திட வேண்டும் என்று அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே சகாதேவ் பாண்டியன், அவரது தம்பி பிரவீன், அவரது சித்தப்பா தனபால் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.