Skip to main content

“தேர்வுக்கு வந்தா மட்டும்போதும்; அரசு வேலை கன்ஃபார்ம்..” லட்சங்களை சுருட்டிய நபர் கைது!

Published on 09/12/2021 | Edited on 09/12/2021

 

Government job Fraudster arrested
தேவநாதன்

 

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அடுத்துள்ள செவலபுரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர்(30). இவருக்கு கடந்த 2015ஆம் ஆண்டு திண்டிவனம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் டிரைவராக வேலை செய்து வந்த சிங்கனூரைச் சேர்ந்த தேவநாதன் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு நண்பர்களாகப் பழகி உள்ளனர். 

 

அப்போது தேவநாதன், ராஜசேகரிடம் “உங்களுக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்தால், அவர்களுக்கு டி.என்.பி.சி. குரூப் தேர்வுகளில் கலந்து கொண்டால் போதும்; அவர்களுக்கு மின்சார வாரியம் மற்றும் அரசு சார்ந்த துறைகளில் வேலை வாங்கித் தருகிறேன்”  என்று கூறியுள்ளார். அதனை நம்பி ராஜசேகர் மற்றும் அவரது உறவினர் ராஜேஷ் ஆகியோர் தேவநாதனிடம் தலா ஏழு லட்ச ரூபாய் வசூல் கொடுத்துள்ளனர். 

 

அதேபோன்று மேல்மலையனூரைச் சேர்ந்த முருகன், ஆனந்தன், அருள்மொழி, தேவன், திருவண்ணாமலையைச் சேர்ந்த பாலன், மணி, பூங்காவனம் உட்பட 10க்கும் மேற்பட்டவர்களிடம் 5 லட்சம், 3 லட்சம் என மொத்தம் 42 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தேவநாதனும் அவரது நண்பர்களான சென்னையைச் சேர்ந்த நாகராஜ், பாபு, தினேஷ், சரவணன் ஆகியோர் பணத்தைப் பெற்று உள்ளனர். 

 

இவர்கள் கூறியபடி வேலை எதையும் வாங்கித் தராமல், பணத்தைத் திருப்பித் தராமல் மோசடி செய்து வந்துள்ளனர். அதனால், பணத்தை பறி கொடுத்தவர்கள் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மோசடிகளில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தற்போது, தேவநாதனை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

 

இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த புஷ்பவள்ளி என்பவருக்கும், எதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி மணிமேகலைக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது மணிமேகலை, புஷ்பவள்ளியிடம் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் ஒரு வருஷம் கழித்து இரண்டு லட்ச ரூபாயாக தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய புஷ்பவள்ளி, தனது மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 12 லட்ச ரூபாயை ஒரு ஆண்டில் 24 லட்சமாக இரட்டிப்பாக தருமாறு கொடுத்துள்ளார். அதேபோன்று பாசி கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் 30 ஆயிரம் ரூபாய் என பலரிடத்திலிருந்தும் பல லட்ச ரூபாய் பணத்தை பெற்றுள்ளார் மணிமேகலை. ஆனால், கூறியபடி ஒரு ஆண்டு கழித்து வாங்கிய பணத்தை இரட்டிப்பாக்கி தரவும் இல்லை, கொடுத்த அசல்பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றியிருக்கிறார்.

 

Government job Fraudster arrested
வெங்கடேசன்

 

இதுகுறித்து புஷ்பவள்ளி, அவலூர்பேட்டை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். போலீசார் முன்னிலையில் 12 லட்ச ரூபாயை குறிப்பிட்ட நாட்களில் தருவதாக வெங்கடேசன் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் எழுதிக் கொடுத்துள்ளனர். அதன்படியும் பணத்தை திருப்பித் தரவில்லை. இதையடுத்து மணிமேகலை அவரது கணவர் வெங்கடேசன் ஆகிய இருவர் மீதும் புஷ்பவள்ளி விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வெங்கடேசனை கைது செய்தனர். அவரது மனைவி புஷ்பவள்ளி தலைமறைவாக உள்ளார். அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.