தலித் மற்றும் சிறுபான்மை இன மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என இன்று நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு அமைப்பின் மாநாடு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
மேலும் இம்மாநாட்டில் நீண்ட காலம் சிறைவாசிகளாக உள்ள முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்., சிறுபான்மையினருக்கு தனி துறையை அரசு ஏற்படுத்த வேண்டும். சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும், தலித் கிருஸ்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், சச்சார் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என பல தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
இந்த மாநாட்டில் நாமக்கல் மாவட்டத்திலிருந்து பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் நாமக்கல் மாவட்டத்திலிருந்து பலர் கலந்து கொண்டனர்.
Show comments