Skip to main content

புதிய ஊராட்சித் தலைவர்களுக்கு நெருக்கடி... 

Published on 25/06/2020 | Edited on 25/06/2020

 

house

 

மத்திய மாநில அரசுகள் ஒவ்வொரு கிராமத்திலும் கூரையில்லா வீடு மாற்றுவதற்கு அனைவருக்கும் வீடு என்ற அடிப்படையில் வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. அப்படிக் கட்டப்படும் வீடுகளுக்கு பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்பு, பிரதமர் வீடு கட்டும் திட்டம் இப்படிப்பட்ட பெயர்களில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டங்கள் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் ஆண்டு தோறும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வீடுகட்ட நிதி வழங்கப்படுகிறது. 

 

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு மத்திய அரசின் பங்காக 72 ஆயிரம் ரூபாய் மாநில அரசின் பங்காக 98 ஆயிரம் ரூபாய் என ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும் கூடுதலாக 100 நாள் வேலை திட்ட மூலம் அந்தப் பணியை அவர்கள் வீடு கட்டும் பணிக்கு மேற்கொண்டால் அதற்காக 20,000 ரூபாய் தூய்மை பாரத இயக்கத்தில் கழிவறை கட்ட 12,000 இப்படி மொத்தம் இரண்டு லட்சத்தி இரண்டாயிரத்து 160 ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. 

 

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகமெங்கும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பயனாளிகள் வீடு கட்டத் துவங்குவதற்கு முன்பே பல ஒன்றியங்களில் பயனாளிகளுக்கு முதல் தவணை தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை பயனாளிகள் எடுத்து தங்கள் சொந்த செலவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தற்போது அதிகாரிகள் வீடு கட்டும் பணிகளை விரைந்து கட்டி முடிக்குமாறு பயனாளிகளுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.

 

ஆனால் பயனாளிகள் தரப்பில் வீடு கட்டுவதற்குத் தேவையான மணல் இல்லை என்று காரணம் கூறுகின்றனர். இதனால் அதிகாரிகள் தரப்பில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட ஊராட்சித் தலைவர்கள் மூலம் வீடு கட்டும் பயனாளிகளை வீடு கட்டும் பணியை விரைந்து முடிக்குமாறு பயனாளிகளைத் துரிதப்படுத்துமாறு தலைவர்கள் மூலம் நெருக்கடி  கொடுக்க முயலுகிறார்கள் அதிகாரிகள். ஊராட்சித் தலைவர்கள் இதில் தலையிட தயக்கம் காட்டுகிறார்கள். 

 

உதாரணமாக கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 53 ஊராட்சிகளில் 1,489 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட பலர் இன்னும் வீடு கட்டி முடிக்கப்படவில்லை. பயனாளிகளை விரைவில் வீடு கட்டி முடிக்குமாறு தலைவர்கள் மூலம் நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

 

அதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் பலரும் ஏற்கனவே அதிகாரிகளால் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் வீடு கட்டும் பணியை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளே முன்நின்று அதைக் கண்காணிக்க வேண்டும். அதில் எங்களைச் சம்பந்தப் படுத்தக்கூடாது இனி வரும் காலங்களில் வீடு கட்டும் பயனாளிகளை ஊராட்சித் தலைவர்கள் மூலம் தேர்வு செய்ய வேண்டும். மேலும் வீடு கட்டும் பயனாளிகளுக்குத் தேவையான அளவு  மணல் எடுத்துக்கொள்ள தலைவர்கள் மூலம் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலமே இந்தத் திட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும். நாங்களும் பயனாளிகள் பணிகளை விரைந்து முடிக்கச் சொல்லி வலியுறுத்துவோம் என்கிறார்கள் பல்வேறு ஊராட்சிமன்றத் தலைவர்கள்.

 

இதே போன்ற பிரச்சினை தமிழகம் முழுவதும் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளும் அதிகாரிகளும் சிக்களில் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள். இதில் வீடு கட்டாமலே முறைகேடுகள் நடந்துள்ளதாக பல்வேறு ஒன்றியங்களில் கண்டறியப்பட்டு ஆய்வு நடவடிக்கையில் உள்ளது. எனவே வீடு கட்டும் திட்டத்தை ஒவ்வொரு ஊராட்சி மன்றத்தலைவர் மூலம் தகுந்த பயனாளிகளை தேர்வு செய்து வீடுகளை ஒதுக்கீடு செய்து தலைவர்கள் மூலம் விரைந்து பணிகள் முடிக்க அதிகாரிகளின் முழு ஒத்துழைப்புத் தேவை என்கிறார்கள் ஊராட்சி மன்றத் தலைவர்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.