சேலம் அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கிருந்து நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் அரசு மருத்துவமனையில் முதல் தளத்தில் உள்ள ஆர்த்தோ ஆபரேஷன் தியேட்டரில் மின் கசிவு காரணமாக ஏசியில் பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். மருத்துவமனை கட்டிடங்களுக்குள் புகை மூட்டம் ஏற்பட்டதால் உடனடியாக அவசர அவசரமாக சுமார் 80க்கும் மேற்பட்ட நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். இந்த திடீர் தீ விபத்து சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.