Skip to main content

“அரசு எங்கள் மனச் சுமைகளை போக்கியுள்ளது..” - செவிலியர் சங்க பொதுச் செயலாளர் உஷாராணி

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

"The government has relieved us of our mental burdens ..." - Usharani, General Secretary of the Nurses' Association

 

தமிழ்நாடு முழுக்க எட்டாயிரம் கிராம சுகாதார செவிலியர்கள் (VHN) உள்ளார்கள். அவர்களுக்கு அடுத்த நிலையில் SHN, CHN என இவர்கள் மூவாயிரம் பேர் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் தாய், சேய் நலப் பிரிவில் செவிலியர்களாக உள்ளனர். நகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு மருத்துவ வசதியை நேரிடையாக கொண்டு செல்கின்றனர். 

 

அதேபோல், கரோனா தடுப்பூசி பணியிலும் இவர்களது பங்கு அதிகளவில் இருந்துவருகிறது. ஏற்கனவே உள்ள தாய் சேய் நலப் பணியோடு, மெகா கேம்ப், பூத் வாரியாக முகாம், கிராமம் கிராமமாக, வீடு வீடாக என வாரத்தில் 7 நாட்களும் தொடர்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் மன உளைச்சல் உட்பட பல்வேறு நெருக்கடிக்குள்ளான செவிலியர்கள், அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கைகளை முன்வைத்தனர். 

 

இந்நிலையில், ஐந்து அமைப்புகளை உள்ளடக்கிய VHN, SHN, CHN கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு முழுவதும் 19ஆம் தேதி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் கண்டன ஆர்பாட்டம் நடத்தினார்கள். அடுத்து 23ஆம் தேதி சென்னையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு முழுவதிலும் இருந்துவந்த செவிலியர்கள் போராட்டம் நடைபெறும் என அறிவித்தார்கள். 

 

இத்தகவல் முதல்வர் அலுவலக கவனத்திற்குச் செல்ல, ‘உடனே அவர்களை அழைத்துப் பேசி தீர்வு காணுங்கள்’ என சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணனுக்கு சி.எம். அலுவலகத்திலிருந்து தகவல் வந்துள்ளது. 22ஆம் தேதி கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் ராதாகிருஷ்ணன் பேசியிருக்கிறார். அதற்கு செவிலியர் சங்க நிர்வாகிகள், ‘அமைச்சரிடம்தான் பேச வேண்டும்’ என கூறியிருக்கிறார்கள். அமைச்சரிடம் பேசிய செயலர் ராதாகிருஷ்ணன், 24ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, பேச்சுவார்த்தையில் அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. 

 

"The government has relieved us of our mental burdens ..." - Usharani, General Secretary of the Nurses' Association

 

இது பற்றி நம்மிடம் பேசிய கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில பொதுச் செயலாளர் உஷாராணி, “24ஆம் தேதி காலை உயர்மட்ட அலுவலர்கள் உள்பட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருடன் நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டு அமைச்சர், எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டார். ஒரு கிராமத்தில் ஒரே இடத்தில் தடுப்பூசி பணியை மேற்கொள்ளலாம் என்றும், தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ள இந்த வாரம் தவிர்த்து, இனிவரும் வாரங்களில் வாரத்தில் ஒரே ஒரு முகாம் என்றும், அதுவும் விடுமுறை நாள் இல்லாமல் பணி நாட்களில் நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். 

 

அதேபோல் முகாம் நடைபெறும் நேரத்தை காலை 7 முதல் இரவு 7 என்பதை மாற்றி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தலாம் என்றும் ஒப்புதல் அளித்துள்ளார். கரோனா தடுப்பூசி சம்பந்தமாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். 

 

முதல்வர் அறிவித்தபடி ஊக்க ஊதியம் அனைவருக்கும் வழங்கப்படும் என்றார். அதேபோல் எங்களது மற்றொரு கோரிக்கையான சமுதாய சுகாதார செவிலியர் பணியிலிருந்து  தாய்-சேய் நல அலுவலர் 50 : 50 கிராம சுகாதார செவிலியர்கள் கோரிக்கைகளுக்கு 15 முதல் 20 நாளில் குழு அமைத்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஏற்கனவே நாங்கள் அதிகாரிகள் மட்டத்தில் பேசி எதுவும் நடக்கவில்லை. ஆனால், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு எங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி, மனச் சுமைகளை போக்கி சுமுக தீர்வு தந்துள்ளது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கையில் புத்தகங்கள் தவழட்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Let the books creep in the hand says Chief Minister MK Stalin

மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் சபையான யுனெஸ்கோ சார்பில் உலக புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உலக புத்தக தின வாழ்த்துச் செய்தியை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “புதிய உலகத்திற்கான திறவுகோல், அறிவின் ஊற்று, கல்விக்கான அடித்தளம், சிந்தனைக்கான தூண்டுகோல், மாற்றத்திற்கான கருவி, மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை. அதனால் புத்தகங்களை வாசியுங்கள், நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும், நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன். கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2017 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்தும் 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் தன்னைச் சந்திக்க வருபவர்கள், பூங்கொத்துகள், பொன்னாடைகளைத் தவிர்த்து அன்பின் பரிமாற்றத்திற்கு அடையாளமாக புத்தகங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தன்னைச் சந்திக்க வந்த பலரும் வழங்கிய ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கும், புத்தகங்கள் கோரிக் கடிதம் அளித்தவர்களுக்கும், அமைப்புகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Greetings from CM MK Stalin to chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. 

Greetings from CM MK Stalin to chess player Gukesh

இந்நிலையில் செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.