Skip to main content

திறக்கப்படாத அரசு பூங்காவின் உடற்பயிற்சி கருவிகள் சேதம்...!

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

திருவாடானையில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அரசு  பூங்காவில் விஷமிகள் உள்ளே புகுந்து உடற்பயிற்சி கூடத்தில் உள்ள உடற்பயிற்சி கருவிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் பல லட்சம் அரசு பணம் விரயமாகியுள்ளதால் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

 

Government gym tools damage

 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அரசு பூங்கா தமிழக அரசால் ரூபாய் 20.71 லட்சம் செலவில் கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுநாள் வரை திறக்கப்படாமல் உள்ளது. இந்த பூங்காவில் தினமும் காலை மாலை வேளைகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடை பயிற்சி மற்றும் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்கின்றனர்.
 

உடற்பயிற்சி கூடத்தில் பல லட்சம் செலவில் உடற்பயிற்சி உபகரனங்கள் உள்ளது. இதில் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்து வந்தார்கள்.  இந்நிலையில் வழக்கம்போல் பயிற்சி செய்ய சென்ற இளைஞர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் உள்ளே உள்ள உடற்பயிற்சி சாதனங்கள் அனைத்தும் உடைக்கப்பட்டும் உட்காரும் இருக்கைகள் பிளேடால் கிழித்து சேதப்படுத்தியும் உள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் இப்படி உபகரணங்களை சேதப்படுத்திய விஷமிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்க, காவல்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆணழகன் போட்டிக்காக கடும் பயிற்சி; ஜிம்மிலேயே ஏற்பட்ட உயிரிழப்பு

Published on 10/10/2023 | Edited on 10/10/2023

 

Training for the men's competition; A casualty at the gym itself

 

ஆணழகன் போட்டிக்காக தயாராகி வந்த இளைஞர் ஜிம்மிலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

 

சென்னை அம்பத்தூர் மீனாம்பேடு பகுதி சேர்ந்தவர் யோகேஷ் (41). இவர் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஆணழகன் போட்டிக்காக தன்னை தயார்படுத்தி வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த அவர் அங்கிருந்த குளியல் அறையில் குளிர்ந்த நீரில் குளித்துள்ளார். நீண்ட நேரமாக உள்ளே சென்ற யோகேஷ் வெளியே வராததால் மற்றவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்பொழுது அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Next Story

சிக்ஸ்பேக் கனவு; இளைஞருக்கு நேர்ந்த விபரீதம் 

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

man passed away Coimbatore

 

கோவை மாவட்டம் மணியக்காரம்பாளையத்துக்கு அருகே உள்ளது ரவீந்திரநாத் தாகூர் சாலை. இந்த பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. 70 வயதான இவர், அவருக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்து வருகிறார். இவரது இளைய மகனான தினகர் என்பவர், தங்களுடைய தோட்டத்தில் உள்ள விவசாய வேலைகளை கவனித்து வந்துள்ளார்.

 

இந்நிலையில், 30 வயதான தினகர் சற்று ஒல்லியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அதற்காக கவலைப்பட்ட இவர், தனது உடம்பை மெருகேற்ற வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அதன்படி,  தினகர் கடந்த சில மாதங்களாக அவரது வீட்டுக்கு அருகில் உள்ள ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது, தனது உடலை கட்டுமஸ்தாக மாற்றுவதற்காக புரோட்டின் பவுடரை உட்கொண்டு வந்த தினகர், அதிக அளவு அசைவ உணவுகளையும் எடுத்துக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அதில், விதவிதமான உணவுகளை காலை, மதியம், இரவு என மூன்று வேலைகளும் வித்தியாசமாக சாப்பிட்டு வந்துள்ளார். இதனிடையே தினகருக்கு ஏற்கனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டதோடு வாந்தியும் எடுத்து வந்துள்ளார்.

 

இதனையடுத்து, தினகரின் பெற்றோர் அவரை பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மாத்திரைகள் வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால், மாத்திரையை சாப்பிட மறுத்த தினகர், வயிற்று வலியால் துடித்துள்ளார். இதைப் பார்த்து பதற்றமடைந்த அவரது பெற்றோர், தினகரை அழைத்துக் கொண்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தினகரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி தினகர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தினகரின் பெற்றோர், என்ன செய்வது எனத் தெரியாமல் கண்ணீர்விட்டுக் கதறி அழுதுள்ளனர்.  தன்னுடைய மகனுக்கு திருமண வரன் பார்த்து வந்த நேரத்தில், இப்படி நடந்ததை எண்ணி, தேம்பித் தேம்பி அழுகின்றனர்.

 

இதையடுத்து, இது தொடர்பான புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார், தினகரின் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், உடற்பயிற்சி மேற்கொண்டு வந்த தினகர், புரோட்டின் பவுடரை அதிகமாக உட்கொண்டதால் உயிரிழந்தாரா? அல்லது கொழுப்பு சத்தால் பாதிக்கப்பட்ட தினகர் அதிகளவு அசைவ உணவுகளை சாப்பிட்டதால் உயிரிழந்தாரா எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது நடந்த இச்சம்பவம் கோவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.