Skip to main content

அரசு ஊழியர்களுக்கு தபால் வோட்டு படிவம் கிடைக்கவில்லை... 100 சதம் வாக்குப் பதிவு சாத்தியமா?

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

தேர்தல்களில் 100 சதம் வாக்குப் பதிவு நடந்தாக வேண்டும் என்று கடும் போராட்டம் நடத்துகிறது தேர்தல் ஆணையம். மறு பக்கம் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் 100 சதம் வாக்குப் பதிவு செய்ய வேண்டும், என்று நோட்டீஸ்கள் மற்றும் பிரச்சாரம் மூலமாக பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர். நாடு முழுமையான தேர்தலுக்காக அரசு கோடிக் கணக்கில் பணத்தைச் செலவிட்டும் வருகிறது. தோராயமாகப் பார்த்தாலும், தமிழ்நாடு போன்றதொரு மாநிலத்திற்கு அரசு ரூ. 441 கோடி தேர்தலுக்காகச் செலவிடுகிறது என்கின்றனர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள்.

 

nellai

 

இதனிடையே தேர்தல் பணிக்காக பல மாநிலங்களில், குறிப்பாகத் தமிழிகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களே பல்லாயிரக்கணக்கில் பயன்படுத்தப்படுகின்றனர். பணி காரணமாக அவர்கள் வாக்குச் சாவடிக்குச் செல்ல முடியாத காரணத்தால் அவர்கள் தங்களின் வாக்குகளை விண்ணப்பம் மூலம் பதிவு செய்து அனுப்பிவிடுவர். அதற்கு ஏற்ப அவர்களுக்கான தபால் வாக்கு படிவமான 12 மற்றும் 12ஏ. படிவங்கள் வழங்கப்படுகின்றன.
 

இந்தப் படிவங்கள் அவர்கள் தேர்தல் பயிற்சிக்குச் செல்கிறபோது வழங்கப்படுவது நடைமுறை இந்த முறை தவிர, அவர்கள் வேறு வழிகளில் வாக்குப் பதிவு செய்ய முடியாது.
 

தற்போதைய மக்களவை தேர்தலுக்கான தபால் வாக்குப் படிவங்கள் நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பணி புரியம் அரசுப் பணியாளர்களில் சுமார் 2500க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு படிவம் வரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
 

முன்பெல்லாம் தேர்தல் பணியிலிருக்கும் நாங்கள் வாக்குப்படிவம் கேட்டு விண்ணப்பிப்போம். உடனே வந்ததும் அவைகளைப் பூர்த்தி செய்து அனுப்பிவிடுவோம். தற்போது அதற்காக தொடர்புடைய தாலுகா அலுவலகங்களில் போய் கேட்டால், உரிய பதில் இல்லை. தாழையூத்து, சங்கர் நகர் கரையிருப்பு போன்ற ஏரியாக்களிலுள்ள அரசுப் பணியாளர்களுக்கு உரிய பாரம் கிடைக்கவில்லை என்கின்றனர் அரசுப் பணியாளர்கள் வட்டாரங்கள்.

 

nellai

 

நெல்லை மாவட்டத்தில் 14667 அரசுப் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் தபால் ஒட்டு பெறுவதற்கான கடைசி நாளான ஏப்ரல் 11 வரை, 12 ஆயிரத்து 30 பேர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர் மற்றவர்கள் விண்ணப்பிக்கவில்லை என்கிறார் மாவட்டக் கலெக்டர் ஷில்பா. அரசுத்துறை ஊழியர்களே வாக்குப் பதிவில் ஆர்வம் காட்டாத நிலையில் 100 சதம் வாக்குப் பதிவு சாத்தியமாகுமா என்பதே கேள்வியாக நிற்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக வழக்கு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Case against Nayinar Nagendran!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனின் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இந்தச் சோதனையில் ரூ.1.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, நெல்லையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதிக்குத் தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மனு தொடர்பான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை (16-04-24)  விசாணைக்கு வருகிறது. 

Next Story

“தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது” - பிரதமர் மோடி

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
PM Modi says DMK-Congress hates Tamil culture

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் பிரதமர் மோடி இன்று (15.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “தமிழ் புத்தாண்டு தினத்தில் பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தமிழ் மொழியை பா.ஜ.க உலக அளவில் பிரபலப்படுத்தும். உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்களை அமைக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது. தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது. குடும்ப கட்சியான காங்கிரஸ், காமராஜரை அவமதித்தது. எம்.ஜி.ஆர் புகழை திமுக அவமதித்தது. ஜெயலலிதாவை சட்டசபையில் மோசமாக நடத்தியது.

பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்வதை திமுக அரசு தடுக்கிறது. திமுகவும், காங்கிரஸும் தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமாக கச்சத்தீவை வேறொரு நாட்டுக்கு கொடுத்துவிட்டனர். கச்சத்தீவை தாரைவார்த்தது மன்னிக்க முடியாத பாவம். குடும்ப அரசியலை ஆதரிக்கும் கட்சியின் ஊழல் ஆட்சியால் தமிழ்நாடு துன்பப்படுகிறது” எனப் பேசினார்.