Skip to main content

வேதா இல்ல விவகாரம் - இழப்பீட்டுத் தொகையைத் திரும்பப் பெற அரசு முடிவு

Published on 16/02/2022 | Edited on 16/02/2022

 

xமநலவ

 

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சட்டமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றியது. இந்நிலையில், வேதா நிலையத்தை அரசுடைமையாக்கிப் பிறப்பித்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், இழப்பீடு நிர்ணயம் செய்ததை எதிர்த்து ஜெ. தீபா இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை ஒன்றாக விசாரித்து வந்தது உயர் நீதிமன்றம். 

 

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை உயர்நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு வழங்கியது. அதில், " வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது. நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் செல்லாது. வேதா நிலையத்தை தீபா, தீபக்கிடம் மூன்று வாரங்களில் ஒப்படைக்க சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்படுகிறது. நீதிமன்றத்தில் செலுத்திய ரூபாய் 67.95 கோடி இழப்பீட்டை அரசுத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்" என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் செலுத்திய 67.95 கோடி பணத்தை அரசு திரும்பப் பெற்றுக்கொள்வதாக தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இதன்மூலம் முந்தைய அரசின் கையகப்படுத்தும் நடவடிக்கையை தற்போதைய அரசு திரும்பப் பெற்றுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்