Skip to main content

சாலை அமைத்து தந்த அரசு! மின் இணைப்புக்கு அனுமதி தரவில்லை !

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

சேலம் மாவட்டம் ஆத்தூர் (வ) அருகே உள்ள துலுக்கனூர் பகுதியில் சுமார் 45 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் 110 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இவர்கள் வசிக்கும் பகுதியானது பழங்காலத்தில் ஏரியாக இருந்துள்ளது. இருப்பினும் அந்த ஏரியானது ஆழம் இல்லாமல் மற்றும் வறண்ட பகுதியாக காணப்படுகிறது. இதனால் இந்த இடத்தில் மக்கள் குடியேறி உள்ளனர். ஆனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தந்த தமிழக அரசு "மின் இணைப்புக்கு" மட்டும் அனுமதி தரவில்லை. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் சாலை வசதி , தண்ணீர் வசதி , மின் இணைப்பு மற்றும் வீட்டு வரி ஆகியவை 2009 வரை கட்டி உள்ளனர்.அரசு அதிகாரிகள் இவ்விடம் ஏரி ஆக்கிரப்பை என்பதால் மின் இணைப்பு துண்டித்தனர். இது தொடர்பாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் சென்ற மக்கள் அங்கு உதவி பொறியாளர் அவர்களை சந்தித்து பேசியுள்ளனர். 
 

power cut

இந்த விவகாரம் தொடர்பாக விளக்களித்த மின் வாரிய பொறியாளர் நீங்கள் வசிக்கும் இடம் ஏரி ஆக்கரிப்பு இடம் எனவே இந்த பகுதிக்கு மின் இணைப்பு கொடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் முதல்வருக்கு கோரிக்கை கடிதம் வழங்கியுள்ளனர். இந்த கடிதம் தொடர்பாக எந்த ஆய்வும் நடத்தவில்லை. ஆனால் இது வரை மக்களுக்கு வீடுகளை அரசு ஒதுக்கவில்லை. மேலும் ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக சின்னதம்பி அவர்கள் உள்ளார். இவரும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஓட்டுக்கு மட்டுமே எங்களை தேடி வருகின்றனர் அரசியல் கட்சிகள் . இது குறித்து இப்பகுதி மக்கள் நமக்கு அளித்துள்ள பேட்டியில் மின்சாரம் இல்லாததால் பள்ளி குழுந்தைகள் இரவு நேரத்தில் படிக்க இயலவில்லை மற்றும் இரவு நேரத்தில் பாம்புகள் மற்றும் தேள்கள் உலா வருவதாகவும் , இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொரு நாளும் அச்சத்திலேயே உறங்குகின்றனர். மேலும் எங்கள் வீடுகளில் மின்சாரம் இல்லாததால் அதிக மதிப்பெண்கள் பெற இயலவில்லை மற்றும் கனவுகள் சிதைவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.  
 

people issues

ஆனால் இந்த பகுதிக்கு மிக அருகில் உள்ள கோவில்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எங்கள் பகுதிக்கு மின் இணைப்பு வசதி வழங்கவில்லை. மேலும் மின்கம்பங்கள் இப்பகுதியில் உள்ளனர். ஒன்று எங்களுக்கு மாற்று இடம் வேண்டும் . இல்லையெனில் நாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் அரசு பட்டா வழங்க வேண்டும். அப்போது தான் எங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு கிடைக்கும். எனவே தமிழக அரசு மற்றும் சேலம் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என மக்கள் கேட்டுக்கொண்டனர். இந்த விவகாரத்தை ஆத்தூர் பகுதியை சேர்ந்த "கவிகை அறக்கட்டளை" என்ற இளைஞர்களை கொண்ட  தனியார் தொண்டு அமைப்பு கையில் எடுத்து அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

no power connection


 

பி . சந்தோஷ் , சேலம் 

சார்ந்த செய்திகள்

Next Story

அழுகிய நிலையில் இரு சடலம் மீட்பு; இ.பி மீது பொதுமக்கள் கொந்தளிப்பு

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
Two farmers passed away in Tenkasi electrocution

தென்காசி மாவட்டத்தின் புளியங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளான சண்முகவேல் மற்றும் குருசாமி இருவரும் சகோதர வழி உறவினர்கள். இருவருக்கும் கிராமத்தின் வெளியே தனித்தனியாக ஒன்று மற்றும் ஒன்றரை ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. அதில் கடந்த 5ம் தேதியன்று தான் செய்த விவசாய மகசூலைப் பார்க்கச் சென்றிருக்கிறார் சண்முகவேல். வயலை சுற்றிப்பார்த்து வந்த சண்முகவேல் எதிர்பாராத வகையில் வயலில் அறுந்த கிடந்த ஹெவி மின் வயரைக் கவனிக்காமல் மிதித்திருக்கிறார். இதில் ஹெவி வோல்டேஜ் மின்சாரம் தாக்கிய சண்முகவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகி இருக்கிறார்.

சண்முகவேல் வீட்டுக்கு வராததை அறிந்த அவரது உறவினர்கள் குருசாமியிடம் கேட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த 6ம் தேதியன்று மதியம் வயல் பகுதிக்கு சென்ற குருசாமி, அங்கே சண்முகவேலைத் தேடியிருக்கிறார். அவர் குப்புறக் கிடந்ததைக் கண்டு பதறியவர் அவரைத் தட்டி எழுப்ப முயற்சித்துள்ளார் குருசாமி. இதில் பக்கத்தில் கிடந்த ஹெவி மின்வயர் பட்டதால் மின்சாரம் தாக்கி அவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகி இருக்கிறார்.

Two farmers passed away in Tenkasi electrocution

இந்த நிலையில் நேற்று முன்தினம் பக்கத்து வயல்காரரான குமார் தன் வயலுக்குச் சென்றபோது அங்கே அடுத்தடுத்து மின்சாரம் தாக்கப்பட்டு சண்முகவேலும், குருசாமி இருவரும் உயிரிழந்துகிடப்பது தெரியவரவே உடனே புளியங்குடி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்திருக்கிறார். அதையடுத்து சம்பவ இடம் விரைந்த இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் எஸ்.ஐ.சஞ்சய்காந்தி உள்ளிட்ட போலீசார் அழுகிய நிலையில் கிடந்த இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து புளியங்குடி போலீசார் விசாரணை நடத்த, ஊருக்குள்ளோ இந்த சம்பவம் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி ஊர்மக்கள் திரண்டிருக்கிறார்கள். ‘வயல்வெளி பகுதிகளில் செல்லும் அதீக அழுத்த மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் மறுநொடியே அது தொடர்பான டிரான்ஸ்ஃபார்மரின் அந்த வழி மின் இணைப்பிற்கான ஃபியூஸ் தானாகவே கட்டாகி மின்இணைப்பு துண்டித்து விடுகிற வகையில் தானே செட் செய்வது வழக்கம். அப்படியிருக்க இந்த மின்வயர் அறுந்த உடனே ஏன் மின் இணைப்பு கட்ஆகல. முறைப்படி செய்யப்பட்டிருந்தா விலை மதிப்புள்ள இரண்டு விவசாயிகளின் உயிர் பலியாகி இருக்குமா. இதுக்கு இ.பி. பதில் சொல்லணும்.

உயிரிழந்தவர்களில் சண்முகவேலுக்கு மனைவியும் 2 பெண்பிள்ளைகளும், குருசாமிக்கு மனைவியும் 3 பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர். இவர்களுக்கு போதிய நிவாராண உதவியோட ரெண்டு குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்கவேண்டும். அப்போதுதான் உடலை வாங்குவோம்’ என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதையடுத்து, மின்வாரியத் துறை பலியான இரண்டு குடும்பங்களுக்கும் தலா மூன்று லட்சம் என 6 லட்சம் இழப்பீடு அளித்திருக்கிறது. அதிகாரிகளின் உறுதியளித்ததைத் தொடர்ந்து உடல்களை வாங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

Next Story

5 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
Extension of time for electricity bill payment in 5 districts

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன் தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. 

தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டும், மாற்று பாதையில் இயக்கப்பட்டும் வருகின்றன. மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கான அவசர உதவிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியிருந்தார்.

இதனையடுத்து, பேரிடர் மீட்புப்பணியை துரிதப்படுத்த ஏற்கனவே கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகிய 5 அமைச்சர்கள் நியமித்திருந்த நிலையில், கூடுதலாக மேலும் 4 அமைச்சர்களை நியமித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், ராஜகண்ணப்பன், மூர்த்தி ஆகிய 4 அமைச்சர்களை முதலமைச்சர் நியமித்துள்ளார். மேலும், 4 மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் 4 பேரும் விரைந்து சென்று மீட்புப்பணிகளை துரிதப்படுத்துவர் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், கனமழை எதிரொலியால் 5 மாவட்டங்களில் உள்ள மக்கள் தங்களுடைய மின்கட்டணம் செலுத்த மின்சாரத்துறை அவகாசம் கொடுத்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள மக்கள் இன்று மற்றும் நாளைக்குள் மின்கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் வரும் 20ஆம் தேதி வரை தாமதக் கட்டணமின்றி மின்கட்டணம் செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது.