government colleges professors, employees

அதிக விடுப்பு எடுக்கும் பேராசிரியர்கள், பணியாளர்களின் பட்டியலைத் தயாரித்து ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், அரசு கல்லூரிகளில் பணியாற்று பேராசிரியர்கள், பணியாளர்களில் மருத்துவ விடுப்பு மற்றும் கரோனா தொற்று காரணமாக சிறப்பு தற்செயல் விடுப்பு தவிர, அதிக விடுப்பு எடுக்கும் பேராசிரியர்கள், பணியாளர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலைத் தயாரித்துஉடனே ஒப்படைக்க கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.