Skip to main content

குறைக்கப்பட்ட கட்டணத்தில் அரசு கேபிள்! மாவட்ட கலெக்டர் உத்தரவு!

Published on 01/09/2019 | Edited on 01/09/2019

திண்டுக்கல் மாவட்ட  கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள விஜயலட்சுமி பல அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார்.

 

 Government cable at reduced rates! District Collector's order!


திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கேபிள்டிவி குறித்து ஒரு அதிரடி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் மத்திய அரசின் தொடர்பு தொலைபேசி தொடர்பு அமைச்சகம் நாடு முழுவதும் டிஜிட்டல் ஒளிபரப்பு மூலம் மட்டுமே டிவி சேனல்களை ஒளிபரப்ப வேண்டும் என்றும் பழைய முறையிலான அனலாக் முறை ஒளிபரப்புக்கு முற்றிலும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் கடந்து 2017 செப்டம்பர் முதல் அனைத்து மாவட்டங்களிலும் பொது மக்களுக்கு விலையில்லா செட்டாப்பாக்ஸ் மூலம் உயர் தொழில்நுட்பத்தில் துல்லியமான முறையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகிறது. மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகள் படி அனலாக் சிக்னலில் ஒளிபரப்புவது சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அனலாக் முறையில் ஒளிபரப்பு செய்யும் ஆபரேட்டர்கள் உடனடியாக ஒளிபரப்பு நிறுத்தம் செய்து சந்தாதாரர்களுக்கு ஜெட் டிஜிட்டல் முறையில் மட்டுமே ஒளிபரப்பு செய்ய வேண்டும் மீறினால் சட்டப்படி ஆபரேட்டர்களின் ஒளிபரப்பு உபகரணங்கள் பறிமுதல் செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்.

 

cable

 

மேலும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய விதிகளின்படி வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி செட்டாப் பாக்ஸ்களை நிறுவனத்திற்கு நிறுவனம் பரிமாற்றம் செய்வது குற்றம் அந்த வகையில் அரசு செட்டாப் பாக்ஸ்களை பரிமாற்றம் செய்வது தெரியவந்ததால் ஆப்பரேட்டர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது கேபிள் டிவி நிறுவனம் 144 ,154 மாத சந்தா தொகையை 190 சேனல்களை ஒளிபரப்பி வருகிறது. இந்த சந்தா கட்டணம் குறித்து குறைப்புக்கு பின்னர் அரசு கேபிள் செட் டாப் பாக்ஸ் இணைப்புக் கோரும் பொதுமக்களுக்கு ஆபரேட்டர்கள் இணைப்பு வழங்க வேண்டும். இணைப்பு வழங்க மறுத்தால் 1800 42 52 911
மற்றும்  94 9800 25 72 ஆகிய இலவச தொலைபேசி எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று தனது அறிக்கையில் மாவட்ட கலெக்டர் கூறி இருக்கிறார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.