Skip to main content

குறைக்கப்பட்ட கட்டணத்தில் அரசு கேபிள்! மாவட்ட கலெக்டர் உத்தரவு!

Published on 01/09/2019 | Edited on 01/09/2019

திண்டுக்கல் மாவட்ட  கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள விஜயலட்சுமி பல அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார்.

 

 Government cable at reduced rates! District Collector's order!


திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கேபிள்டிவி குறித்து ஒரு அதிரடி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் மத்திய அரசின் தொடர்பு தொலைபேசி தொடர்பு அமைச்சகம் நாடு முழுவதும் டிஜிட்டல் ஒளிபரப்பு மூலம் மட்டுமே டிவி சேனல்களை ஒளிபரப்ப வேண்டும் என்றும் பழைய முறையிலான அனலாக் முறை ஒளிபரப்புக்கு முற்றிலும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் கடந்து 2017 செப்டம்பர் முதல் அனைத்து மாவட்டங்களிலும் பொது மக்களுக்கு விலையில்லா செட்டாப்பாக்ஸ் மூலம் உயர் தொழில்நுட்பத்தில் துல்லியமான முறையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகிறது. மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகள் படி அனலாக் சிக்னலில் ஒளிபரப்புவது சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அனலாக் முறையில் ஒளிபரப்பு செய்யும் ஆபரேட்டர்கள் உடனடியாக ஒளிபரப்பு நிறுத்தம் செய்து சந்தாதாரர்களுக்கு ஜெட் டிஜிட்டல் முறையில் மட்டுமே ஒளிபரப்பு செய்ய வேண்டும் மீறினால் சட்டப்படி ஆபரேட்டர்களின் ஒளிபரப்பு உபகரணங்கள் பறிமுதல் செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்.

 

cable

 

மேலும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய விதிகளின்படி வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி செட்டாப் பாக்ஸ்களை நிறுவனத்திற்கு நிறுவனம் பரிமாற்றம் செய்வது குற்றம் அந்த வகையில் அரசு செட்டாப் பாக்ஸ்களை பரிமாற்றம் செய்வது தெரியவந்ததால் ஆப்பரேட்டர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது கேபிள் டிவி நிறுவனம் 144 ,154 மாத சந்தா தொகையை 190 சேனல்களை ஒளிபரப்பி வருகிறது. இந்த சந்தா கட்டணம் குறித்து குறைப்புக்கு பின்னர் அரசு கேபிள் செட் டாப் பாக்ஸ் இணைப்புக் கோரும் பொதுமக்களுக்கு ஆபரேட்டர்கள் இணைப்பு வழங்க வேண்டும். இணைப்பு வழங்க மறுத்தால் 1800 42 52 911
மற்றும்  94 9800 25 72 ஆகிய இலவச தொலைபேசி எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று தனது அறிக்கையில் மாவட்ட கலெக்டர் கூறி இருக்கிறார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.