Skip to main content

தேசிய நெடுஞ்சாலை டோல்கேட்டில் அரசு பஸ் அனுமதி மறுப்பு பயணிகள் அவஸ்தை...

Published on 10/12/2020 | Edited on 10/12/2020

 

Government bus permit denial on National Highway vikiravandi tollgate


சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டோல்கேட்டில் கட்டணம் செலுத்திவிட்டு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று சிதம்பரம் பணிமனையில் இருந்து இயக்கப்படும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்துகொண்டிருந்தது. 

 


விக்கிரவாண்டி டோல்கேட் அருகே பிற்பகல் 3 மணியளவில் கடக்க முயன்றபோது சுங்கச்சாவடியில் பணி செய்த ஊழியர்கள் பஸ்சை நிறுத்தி, கட்டணம் செலுத்தினால்தான் பஸ்சை இயக்க முடியும் என்று கறாராக கூறிவிட்டனர். அப்போது அவர்கள் மேலும் கூறும்போது, சிதம்பரம் பணிமனையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கான சுங்கக் கட்டணம், பல லட்சம் ரூபாய் பாக்கி  வைத்துள்ளது. 

 


அந்தப் பணத்தை முழுவதும் செலுத்தினால்தான் பஸ்சை இயக்க முடியும் என்று பஸ்சை விடவில்லை. இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பஸ்சை விட்டு கீழே இறங்கி நீண்ட நேரம்  காத்திருந்தனர். பஸ் டிரைவர் கண்டெக்டர் இருவரும் நீண்ட நேரம் சுங்கச்சாவடி பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு அவர்கள் இது குறித்து பணிமனை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஒருவழியாக பஸ்சை சுங்கச்சாவடியைவிட்டு அனுப்பி வைத்தனர்.

 


இதனால் பஸ் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது. அரசு போக்குவரத்துக் கழகம் டோல்கேட் கட்டணம் கூட செலுத்த முடியாமல் பல லட்சம் பாக்கி வைத்துள்ளது வியப்பாக உள்ளது. மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசும் அதிகாரிகளும் இதுபோன்று தடங்கல்கள் ஏற்படாமல் சரி செய்வார்களா? 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல்...5 சுங்கச்சாவடிகளில் டுவிஸ்ட்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
From the first day of April; Twist at 5 toll booths

வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் குறைந்தபட்சம் 5 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரை கட்டண உயர்வு இருக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.மாதாந்திர கட்டணம் 100 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரை உயர இருப்பதாகக் கூறப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லாடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தால், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Attention Paytm Passtag users

அந்நிய முதலீடுகள் தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் பேமென்ட் வங்கி கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தைப் பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 31 ஆம் தேதி தடை விதித்திருந்தது. அந்த உத்தரவில், வங்கிக் கணக்குகளில் புதிய தொகைகள் ஏதும் வரவு வைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் கடன் பரிவர்த்தனைகள், பேடிஎம் கணக்குகளில் பணச் செலுத்துகை, முன்கூட்டிய பணச் செலுத்துகை உள்ளிட்ட வங்கி சேவைகளுக்காக மார்ச் 15 வரை இந்த சேவைகளைத் தொடர ரிசர்வ் வங்கி அனுமதித்திருந்தது.

மேலும் பேடிஎம் நிறுவனத்தின் மீது சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் பேடிஎம் நிறுவனம் இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. இதனையடுத்து பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விஜய் சேகர் ஷர்மா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மார்ச் 15 ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்த பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் நாளை மறுநாளுக்குள் (15.03.2024) வேறு  வங்கிக்கு மாற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.