Skip to main content

பயணியிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த அரசுப் பேருந்து நடத்துநர்! நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு! 

Published on 05/07/2022 | Edited on 05/07/2022

 

The government bus operator charged extra to the passenger! Consumer court order to provide compensation!

 

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அருகில் உள்ள தேவனூர் பகுதியைச் சேர்ந்தவர் கருணா. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறி உள்ளார். அந்தப் பேருந்து நடத்துநர் திருக்கோவிலூர் செல்வதற்கு ரூ.32 கட்டணம் தருமாறு கேட்டார். அதற்கு கருணா, அனைத்து பேருந்துகளிலும், ரூ. 25 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நீங்கள் மட்டும் ரூ.7 கூடுதலாக ஏன் கேட்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு நடத்துநர், எங்கள் அதிகாரிகள் ரூ.32 கட்டணம் வசூலிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர் எனக் கருணாவிடமிருந்து ரூ.32 ரூபாய் கட்டணம் பெற்றுக் கொண்டார். 

 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கருணா, விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்குத் தொடர்ந்தார். இது சம்பந்தமான வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணைய தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. அதில் அரசு பேருந்து நடத்துநர் கணேஷ், திருக்கோவிலூர் அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளர் மற்றும் விழுப்புரம் மண்டல மேலாண்மை இயக்குநர் ஆகியோரை எதிர் தரப்பினராக சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது. 

 

இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து இன்று நுகர்வோர் நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில், ’நியாயமற்ற வர்த்தக நடைமுறையின் படி முறையீட்டாளரிடமிருந்து அதிகமாக பஸ் கட்டணம் பெற்றது தவறு. அப்படி கூடுதலாக பெற்ற கட்ணத் தொகை ஏழு ரூபாய் மற்றும் அதற்கு அன்றைய தேதியில் இருந்து 12 சதவீத வட்டியுடன் சேர்த்து திருப்பி அளிக்க வேண்டும். முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், மனவேதனை, வீண் அலைச்சலுக்கு இழப்பீடாக 25,000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அதோடு வழக்குச் செலவுக்காக 5000 ரூபாய் சேர்த்து வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. 

 


சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.