Skip to main content

அரசுப் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்! ஒருவர் பலி!  

Published on 26/04/2022 | Edited on 26/04/2022

 

Government bus-lorry collision! One passed away

 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அரசு நெல் குடோனில் இருந்து அரவைக்காக நெல் ஏற்றிக் கொண்டு ஆலங்குடி சென்ற லாரியும் திருப்பூரில் இருந்து அறந்தாங்கி நோக்கி சென்ற அரசுப் பேருந்தும் குன்னக்குரும்பி என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் எரிச்சி கிராமத்தைச் சேர்ந்த முகமது மகதீர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். பேருந்தில் பயணம் செய்த பேருந்து ஓட்டுநர் உள்பட 14க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

விபத்து நடந்ததைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி, புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். லாரிக்குள் சிக்கியிருந்த லாரி ஓட்டுநர் உடல் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. இந்தப் பகுதியில் அடிக்கடி இது போன்ற கோர விபத்துகள் நடந்து வருவது வருத்தமளிப்பதாக கூறுகின்றனர் அப்பகுதி பொதுமக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டுப்பாட்டை இழந்த லாரி; தப்பிக்குதிக்க முயன்ற ஓட்டுநர் உயிரிழப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
bb

கட்டுப்பாட்டை இழந்த லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநர் லாரியின் டயரிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.

நெல்லையில் இருந்து சிவகாசி நோக்கி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இனாம்மணியாச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி சேர்ந்த இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (60 வயது) என்பவர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தார். இரவு வேளையில் திடீரென சாலையின் தடுப்பு மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடியது. லாரி கட்டுப்பாட்டை இழந்தவுடன் எகிறி குதித்து தப்பித்துக் கொள்ளலாம் என வெளியே குதித்த ஓட்டுநர் லாரியினுடைய சக்கரத்திலேயே விழுந்து உயிரிழந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்