government bus incident police investigation

அரசு விரைவு சொகுசுப் பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் நிலைத்தடுமாறிக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Advertisment

திருப்பதியில் இருந்து சேலம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த அரசு விரைவு சொகுசுப் பேருந்து திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே உள்ள லட்சுமிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் நிலைத்தடுமாறிக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்த 50- க்கும் மேற்பட்ட பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நாட்றம்பள்ளிக் காவல்துறையினர், காயமடைந்த பயணிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அத்துடன், விபத்துக் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment