Skip to main content

உயிர் போகும் தருணத்திலும் பயணிகளை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்!; சேலத்தில் நெகிழ்ச்சியான சம்பவம்!!

Published on 12/09/2018 | Edited on 12/09/2018

சேலத்தில், மாரடைப்பால் உயிர் போகும் தருவாயில்கூட 45 பயணிகளை பத்திரமாக காப்பாற்றிவிட்டு அரசு பேருந்து ஓட்டுநர் உயிர் துறந்த நிகழ்வு, துயரங்களையும் கடந்து பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செப்டம்பர் 11, 2018ம் தேதி அதிகாலை 4.45 மணியளவில் புதுச்சேரிக்கு அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தை, விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தியாகதுருகத்தைச் சேர்ந்த கிருஷ்ண சுந்தரானந்தம் (38) என்பவர் ஓட்டிச்சென்றார். அப்போது 45 பயணிகள் அந்தப் பேருந்தில் பயணித்தனர்.

 

bus

 

அதிகாலை 5 மணியளவில் சேலம் பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று ஓட்டுநர் கிருஷ்ண சுந்தரானந்தத்திற்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. பேருந்தில் இருக்கும் பயணிகளுக்கு ஏதும் நிகழ்ந்து விடக்கூடாது என்று நினைத்தாரோ என்னவோ, ஒரு கையால் நெஞ்சை பிடித்துக்கொண்டே, மிகவும் பொறுப்புணர்வோடு சாலையோரமாக பேருந்தை நிறுத்தினார். 


அடுத்த சில நொடிகளில் அவர் தன் இருக்கையில் அமர்ந்தபடியே ஸ்டீயரிங் மீது தலை சாய்ந்த நிலையில் மயங்கி விழுந்தார். திடீரென்று பேருந்து நின்றதாலும், ஓட்டுநர் மயங்கியதாலும் அதிர்ச்சி அடைந்த நடத்துநர், பயணிகள் ஆகியோர் உடனடியாக ஓட்டுநரை அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே கிருஷ்ண சுந்தரானந்தம் மாரடைப்பில் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை காவல்துறையினர் பேருந்து நடத்துநர், பயணிகளிடம் விசாரித்தனர். பின்னர் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. 


இந்தப் பேருந்து, வி-ழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்குச் சேர்ந்தது என்றும், கடலூர் டிப்போவில் இருந்து இயக்கப்பட்டு வருவதும் தெரிய வந்தது. ஓட்டுநர் கிருஷ்ணசுந்தரானந்தத்திற்கு போக்குவரத்துத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட உதவிகள், சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநருக்கு பலமுறை முயற்சித்தும், அவர் செல்போனை எடுக்கவில்லை.


ஓடும் பேருந்தில் கடைசி மூச்சு போகும் தருவாயிலும்கூட 45 பயணிகளுக்கும் சிறு சேதம் கூட ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்த ஓட்டுநரின் செயல், அவர் இறந்த துயரத்தையும் கடந்து, பயணிகளிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.