Skip to main content

அரசு பஸ் டிரைவர் பணிமனையில் தூக்கிட்டு தற்கொலை...

Published on 28/08/2020 | Edited on 28/08/2020
bus

 

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த சில மாதங்களாகவே அரசு பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு பணியாளர்கள் கரோனா சிறப்பு பணிகளுக்கு செல்வதற்காக தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட சில பேருந்துகள் மட்டும் காலை மாலை இயக்கப்படுகிறது. அதன்படி புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் வரை சில சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 

இந்த பணியில் ஈடுபட்டு வந்தார் புதுச்சேரி மாநிலம் மூலக்குளம் ஏரியாவை சேர்ந்த ராமராஜ். இவர் விழுப்புரம் போக்குவரத்துக் கழக பணிமனையில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் நேற்று புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்துக்கு இயக்கப்படும் அரசு சிறப்பு பேருந்தை ஓட்டி வருகிறார். அதன்படி வழக்கம்போல் காலை எட்டு முப்பது மணி அளவில் புதுச்சேரியில் அரசு ஊழியர்களை ஏற்றிக்கொண்டு விழுப்புரம் கொண்டு வந்து இறக்கி விட்டுள்ளார்.

 

இதையடுத்து அந்த பேருந்தை விழுப்புரம் பணிமனையில் நிறுத்தி விட்டு பணிமனை வளாகத்தில் ராமராஜ் ஓய்வு எடுத்துள்ளார். மாலையில் மீண்டும் பணியாளர்களை அழைத்துக்கொண்டு விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு செல்ல வேண்டும். ஆனால் மாலை 4 மணி அளவில் பஸ்சை இயக்குவதற்காக ராமராஜனை தேடியபோது அவரை காணவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது செல்போன் மணி அடித்தது. அதை எடுத்துப் பேசவில்லை. இதையடுத்து ஊழியர்கள் பணிமனையின் அனைத்து பகுதிகளிலும் தேடி பார்த்துள்ளனர். அப்போது ஓய்வு அறைக்கு பின் பக்கம் சென்று பார்த்தபோது அங்குள்ள ஒரு மரத்தில் ராமராஜ் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 

சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து ராமராஜ் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்துகொண்ட ராமராஜ் சட்டைப் பையில் இருந்து ஒரு கடிதம் கண்டெடுத்தனர் போலீசார்.

 

அந்த கடிதத்தில், எனது மனமாற்றத்திற்கு காரணம் பேருந்தில் பயணம் செய்து வந்த பணியாளர்கள் என்றும் தனது பங்காளிகள் தன் உடைமைகள் அனைத்தையும் பறித்துக் கொண்டதாகவும் தனது மனைவியை அலைக்கழித்து வருவதாகவும் இப்படி தனது குடும்ப விஷயத்தை அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு எழுதியுள்ளார் ராமராஜ். கடிதத்தை கைப்பற்றிய போலீசார் அவரது உறவினர்களை வரவழைத்து அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். அரசு பேருந்து ஓட்டுநர் பணிமனை வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

புதுச்சேரியிலிருந்து ,அன்று காலை பஸ்சை ஓட்டி வந்த ராமராஜ், திருபுவனை பகுதியில் பஸ்சை நிறுத்தாமல் ஓட்டி வந்ததாகவும் அதற்காக அவரை பஸ்சில் பயணம் செய்த அரசு ஊழியர் ஒருவர் அவரிடம் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி பல்வேறு மன அழுத்தங்கள் காரணமாக விரக்தியடைந்த ராமராஜ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக தொழிலாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.