Skip to main content

கொள்முதல் நிலைய ஊழல்! குளத்தில் மிதந்த அரசு சாக்குப் பைகள்..!

Published on 20/10/2020 | Edited on 20/10/2020

 

Government bags floating in the pool ..!

 

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அந்தக் கொள்முதல் நிலையத்திற்கு அருகில் உள்ள குளத்தில் அரசுக்குச் சொந்தமான சாக்கு பண்டல்கள் கட்டுக்கட்டாக நனைந்து கிடப்பதைக் கண்ட விவசாயிகள் கொதிப்படைந்துள்ளனர்.

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கண்ணாரப்பேட்டை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இரண்டு நாட்களுக்குமுன்பு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில், கணக்கில் வராத 90 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தைக் கைப்பற்றினர். மேலும், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு, அசேஷம் பகுதியில் உள்ள திறந்தவெளி கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்ட நெல் மூட்டைகளை, மீண்டும் கொள்முதல் நிலையத்தில் விற்பதற்காகக் கொண்டுவந்து அடுக்கிவைக்கப்பட்ட 215 நெல் மூட்டைகளையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். 

 

மேலும் கண்ணாரப்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள், உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள், மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருடன் இணைந்து அடுக்கிவைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் அனைத்தையும் ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் கண்ணாரப்பேட்டை கொள்முதல் நிலையப் பணியாளர்கள் ஆனந்தராஜ், கனகராஜ் ஆகியோர் பணியிடை  நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

 

இந்நிலையில், கண்ணாரப்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு அருகாமையில் இருக்கும் குளத்தில் சாக்குப் பண்டல்கள் மிதப்பதை, அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ந்து போனார்கள். அரசுக்குச் சொந்தமான சாக்குப் பைகள் குளத்தில் மிதப்பதால், விவசாயிகளும் பொதுமக்களும் கோபத்தின் உச்சத்திற்கே சென்று, சாக்குத் தட்டுப்பாடு என்று கூறி நெல்லை, கொள்முதல் செய்ய மறுக்கின்றனர். ஆனால், அரசுக்குச் சொந்தமான சாக்குகளை, அதிகாரிகளின் உடந்தையோடு குளத்தில் மர்ம நபர்கள் வீசியுள்ளனர் எனக் குற்றஞ்சாட்டினர். 

 

Ad

 

தற்போது குறுவை அறுவடை பணிகள் திருவாரூர் மாவட்டத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் கொள்முதல் நிலையத்துக்கு நெல் வரத்து அதிகரித்துள்ளது.  பல கொள்முதல் நிலையங்களில், சாக்குகள் பற்றாக்குறையாக உள்ளதாகக் கூறி நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை என விவசாயிகள் தொடரந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், முறைகேடு நடந்த கண்ணாரப்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு அருகிலேயே சாக்குப் பண்டல்கள் குளத்தில் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.