Advertisment

10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி!

பர

Advertisment

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிக அளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். மாவட்டங்களில்கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு பொதுமுடக்கத்தை வரும் 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. ரயில், பள்ளிக்கூடங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், பார்க், பெரிய கோயில்கள் முதலியவற்றை திறக்க தடையை நீட்டித்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக வரும் 10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe