Skip to main content

ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் ஆமாம் சாமியாக செயல்படுகிறது எடப்பாடி அரசு -கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

Published on 12/05/2019 | Edited on 12/05/2019

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில்  கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில். தமிழகத்தில் நாடாளுமன்ற. சட்டமன்ற இடை தேர்தல்கள் நடந்துமுடிந்துள்ளது. 46 இடங்களில் வாக்களிப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று கூறிய தேர்தல் ஆணையம் 13 இடங்களில் மட்டும்தான் மறு தேர்தல் நடைபெற உத்தரவிட்டுள்ளது.  சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பியில் வாக்களிப்பதில் ஏற்பட்ட பிரச்சினையால் அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது அங்கு மறுவாக்குப்பதிவு நடத்தாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது தேர்தல் ஆணையம் முன்னுன்னு பின்னாக பேசி வருகிறது. 

 

 

 The government acts in harmony with the hydrocarbon project- The government acts in harmony with the hydrocarbon project

 

 

தேர்தல் ஆணையம் முறையான வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவாதப்படுத்த வேண்டும்.  தில்லுமுல்லு செய்தாவது வெற்றி பெற்றுவிடலாம் என்று தமிழக முதல்வர், துணை முதல்வர் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் ஆணையமும் கைப்பாவையாக செயல்படுகிறது.  வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் வரை அச்சமான சூழ்நிலையே உள்ளது.  தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை தலைதூக்கியுள்ளது.  உள்ளாட்சித் தேர்தல் நடந்து இருந்தால் இதுபோன்ற பிரச்சினைகளை  மக்கள் பிரதிநிதிகள் ஈடுகொடுத்து சரி செய்து இருப்பார்கள்.  தற்போது மக்கள்  குடிநீருக்கு  அகதிகள் போல் அலைகிறார்கள்.  வரும் 23 ஆம் தேதி பிறகு ஆட்சி மாற்றம் கண்டிப்பாக இருக்கும். 

 

மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது மக்களின் கருத்து கேட்பு, சுற்றுச்சூழல், வன பாதுகாப்பு உள்ளிட்ட எந்த சட்ட திட்டங்களையும் பின்பற்றாமல் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.  இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிவிடும்.  மற்ற நாடுகளில் மக்கள் வாழும் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல் படுத்த வில்லை.  இங்கு மக்கள் வாழும் பகுதியில் மக்களை அழித்து இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு துடிக்கிறது.  எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜூன் 5 முதல் 10 ஆம் தேதி வரை 6 நாட்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யவலியுறுத்தியும் திட்டத்தில் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கும் வகையில்  டெல்டா  பகுதிகளில் இருசக்கர வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய உள்ளது.  இதில் அனைத்து கட்சியினரும் பொதுமக்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

 

 

 கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி கல்லூரி மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.  வீட்டிலுள்ள பெண்கள் பாலியல் மற்றும் வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெறுகிறது.  தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.  மாணவி கொலையில் ஆகாஷ் என்ற இளைஞரிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியுள்ளார்கள்.  இது சமூக வலைதளங்களில் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர் ஏன் அப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை.  பின்னர் கைது செய்யப்பட்ட ஆகாஷ் தரப்பில் மாணவியும், நானும் காதலித்தது உண்மைதான் ஆனால் கொலை செய்ய அளவுக்கு நான் எதுவும் செய்யவில்லை என்று காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்கள். எனவே காவல்துறையினர்  இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது.  தமிழக அரசு குடும்பத்திற்கு நிவாரண உதவி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

 

 The government acts in harmony with the hydrocarbon project- The government acts in harmony with the hydrocarbon project

 

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறக்க வேண்டும் ஆனால் மேட்டூரில் இருக்கும் தண்ணீரை குடிநீருக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  காவிரி ஆணையத்தை கூட்டி தென்மேற்கு பருவ மழை பெய்யும் போது நமக்கு சேர வேண்டிய தண்ணீரை கேட்டு பெற்று குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழக அரசு நீர்நிலைகளை பாதுகாக்க எந்த அக்கறையும் காட்டவில்லை. கோடை காலங்களில் நீர்நிலைகளை தூர்வாரி, மராமத்து பணிகள் செய்து இருந்தால் பெய்யும் மழைநீரை சேமித்து வைக்கலாம்.  யாகம் நடத்தினால் மழை வரும் என்பதை சொல்வதற்கு அரசு அதிகாரிகள் எதற்கு?  எல்லா பிரச்சினைக்கும் யாகம் வளர்த்து சரி செய்து இருக்கலாமே என கேள்வி எழுப்பினார்.  அப்படியே மழை வந்தாலும் கடலுக்கு தானே அந்த தண்ணீர் செல்லும் பொறுப்பற்ற நிலையில் அரசு நடந்து கொள்கிறது.

 

 

 சுதந்திர போராட்ட வீரர் நல்லகண்ணு மற்றும் முன்னாள் அமைச்சர் கக்கன் பேரன் ஆகியோரின் வீடுகளை அரசு காலி செய்யும் முன்  மாற்று வீடு கொடுத்துவிட்டு  காலி செய்து இருக்க வேண்டும். அவர்களுக்கு உடனே வீடு வழங்க வேண்டும்.  இதனை நிதானமாக அரசு கையாள வேண்டும்.  புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தைரியமாக முதல்வர் நாரயணசாமி அறிவித்துள்ளார் ஆனால் தமிழக முதல்வர் பழனிச்சாமி பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ஆமாம் சாமி போட்டு வருகிறார்.  இவர் மட்டுமல்ல இவர்கள் கூட்டணியில் உள்ள அனைவரும் ஹைட்ரோகார்பன் திட்டத்தில் ஆமாம் சாமியாக  உள்ளனர்.  இவர்களது தேர்தல் அறிக்கையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்வோம் என்று கூறிவிட்டு மோடியிடம் உரலில் மாட்டிய தலை போல் உள்ளனர். 

 

 ஒரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு ரூ150 கோடி வரை செலவு செய்கிறார்கள் இதில் ஜனநாயகம் இல்லை., பணநாயகமாக உள்ளது. அப்படியே ஆட்சி இருந்தாலும்  ஒன்றரை வருடம் தான் அதுவும் 23ம் தேதிக்குப் பிறகு மாறக் கூடிய சூழல் உள்ளது.  தேர்தலுக்கு செலவு செய்யும் ரூ 150 கோடி ரூபாய் வைத்துக் கொண்டு அத்தொகுதியில் உள்ள அடிப்படை வசதிகளை செலவு செய்தாலே மக்கள் சிறப்பாக வாழ்வார்கள் என பேசினார் இவருடன் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கற்பனை செல்வம், நகர செயலாளர் ராஜா, மாவட்டக்குழு முத்து, சிஐடியு ஆட்டோ சங்க கிளை செயலாளர் தியாகராஜன் ஆகியோர் உடன்  இருந்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.