'தமிழக மக்களின் காவலனாக, உண்மை ஊழியனாக பணியாற்றி வருகிறது அரசு'-இபிஎஸ்-ஓபிஎஸ் அறிக்கை 

Government is acting as a guardian of the people of Tamil Nadu as a true servant-EPS,OPS

நேற்றும், இன்றும், நாளையும் அதிமுக அரசின்ஆட்சியேமக்கள் அரசாக தொடர்வதை உறுதி செய்ய உழைப்போம் என அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக அரசின் ஐந்தாம் ஆண்டு ஆட்சி தொடங்குவது ஒட்டி முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர்கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.அதில்,நேற்றும், இன்றும், நாளையும் அதிமுக அரசின் ஆட்சியேமக்கள் அரசாக தொடர்வதை உறுதி செய்ய உழைப்போம். தமிழக மக்களின் காவலனாக, உண்மை ஊழியனாகபணியாற்றி வருகிறது அரசு. இன்னும் ஆற்ற வேண்டிய பணிகள் இருப்பினும் அவற்றை செய்து முடிக்கும் ஆற்றல் நமக்கு உண்டு.அதிமுக அரசேதொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருக்கவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

admk ops_eps Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe