தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவக்கல்லூரி டீன்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீன், செங்கல்பட்டு அரசு மருத்துவனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி டீன் மற்றும் சிறப்பு அதிகாரியாக முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் நிர்மலா, கோவை இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் முத்துக்கிருஷ்ணன், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமனம்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி டீன், சிறப்பு அதிகாரியாக பேராசிரியர் முத்துச்செல்வன் நியமனம். விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி டீன், சிறப்பு அதிகாரியாக பேராசிரியை ரேவதி நியமிக்கப்பட்டுள்ளார். நாகை அரசு மருத்துவக்கல்லூரி டீன், சிறப்பு அதிகாரியாக பேராசிரியர் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.