Skip to main content

சேலத்தில் 16 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்தல்; சிக்கிய விலாங்கு மீனுக்கு 'குண்டாஸ்'!

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 

goondas act ration rice seized salem dsitrict police investigation

 

சேலத்தில், ஒரே இடத்தில் 16 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியைக் கடத்திச்சென்று மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

 

சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு காவல்துறை, சேலம் மாநகர அத்தியாவசியப் பண்டங்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் சம்பந்தமாக சீலநாயக்கன்பட்டி முல்லை நகரில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

 

அந்தப் பகுதியில் இருந்த ஒரு ஒர்க்ஷாப்பிற்கு வெளியே சந்தேகத்திற்கு இடமான வகையில் பத்து மூட்டைகள் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை பிரித்துப் பார்த்தபோது 500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. தலா 50 கிலோ எடையளவில் பத்து மூட்டைகளில் அரிசியைப் பதுக்கி வைத்துள்ளனர்.

 

இதையடுத்து, அந்த ஒர்க்ஷாப்பின் உள்ளே சென்று ஆய்வு செய்தபோது, 310 மூட்டைகளில் 15,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததையும் கண்டுபிடித்தனர்.

 

விசாரணையில், சேலம் கந்தம்பட்டி கிழக்கு காலனி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் பிரகாஷ்(28) என்பவர், ரேஷன் அரிசி மூட்டைகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. தாதகாப்பட்டியைச் சேர்ந்த கோபிநாத் என்பவருடன் சேர்ந்து கொண்டு, சேலம் டவுன், கந்தம்பட்டி, காசக்காரனூர், கொண்டலாம்பட்டி ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை கிலோ 2 ரூபாய்க்கு வாங்கி பதுக்கி வைத்ததும், அவற்றை நாமக்கல், கோவை பகுதிகளில் கோழிப்பண்ணைகளுக்கும், கேரளா மாநிலத்திலும் அதிக விலைக்கு விற்று வந்ததும் தெரிய வந்தது.

 

இதையடுத்து பிரகாஷை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், கடந்த செப்.17- ஆம் தேதி, 2,500 கிலோ ரேஷன் அரிசியைக் கடத்திச்சென்றபோது, மல்லூர் பிரிவு சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையிடம் சிக்காமல் தப்பிச்சென்றுள்ளார். இவ்விரு வழக்குகளிலும் கைது செய்யப்பட்ட பிரகாஷ், சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Ad

 

ரேஷன் அரசி கடத்தல் மன்னன் பிரகாஷ், மீண்டும் மீண்டும் குற்றத்தில் ஈடுபட்டதாலும், ரேஷன் அரிசியைக் கடத்திச்சென்று கள்ளச்சந்தையில் விற்று வந்ததாலும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் ஆய்வாளர் கோபி மாநகர காவல்துறைக்கு பரிந்துரை செய்தார்.

 

அதன்பேரில், சேலம் மாநகர ஆணையர் செந்தில்குமார், ரேஷன் அரிசி கடத்தல்காரர் பிரகாஷை கள்ளச்சந்தைதாரர்கள் தடுப்புச்சட்டத்தின் (குண்டாஸ்) கீழ் கைது செய்ய செவ்வாய்க்கிழமை (அக்.20) உத்தரவிட்டார். மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரகாஷிடம் கைது ஆணை, அக்.21- ஆம் தேதி நேரில் சார்வு செய்யப்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.